ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
எண்ணற்ற வானொலி நாடகங்களும், தொலைக்காட்சி நாடகங்களும், ஒருசில மேடை நாடகங்களும் எழுதியிருக்கிற நான் அவை என் நேயர்களுக்குப் போய்ச் சேருகிறபோது கிடைக்கிற வரவேற்பு, தருகிற உற்சாகத்தில் இப்போது இதனை நாடக வரிசையில் என் ஆறாவது நூலாகத் தருகிறேன். நூலின் தலைப்பாக அமைகிற 'நிழல் தேடும் நெஞ்சங்கள்' என்ற நாடகத்தை, சென்னை வானொலி நிலையம் தயாரித்து ஒலிபரப்பியது. "தடங்கலுக்கு வருந்துகிறோம்” நாடகம் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயிற்று. இவ்விருநாடகங்களுக்குமே நல்ல வரவேற்பிருந்தது. ஏராளமான என் நேயர்கள் பாராட்டியதின் விளைவாகவே மீண்டும் மீண்டும் ஒலிபரப்பாகிற வாய்ப்பு இவற்றிற்கு வாய்த்தது. அதனாலேயே இவை ஒரு அமரத்துவத்தைப் பெறுவதற்காக நூல் வடிவம் தருகிறேன்.
நேர்மையாக வாழ நினைக்கிறவனை, சமூகமும் சூழ்நிலைகளும் நேர்மையாக இருப்பதற்கு உதவ வேண்டுமென்கிற சீரியஸான விஷயத்தை நிழல் தேடும் நெஞ்சங்களிலும் திருமணம் செய்து கொள்ளத் துடிக்கிற ஒரு இளைஞன் தன் திருமண முயற்சிகளிலெல்லாம் தோல்வியுற்று தொல்லைகளில் மாட்டிக் கொள்கிற சிரிப்பலைகளை ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்', நாடகத்திலும் தந்திருக்கிறேன்.
இவ்விரு நாடகங்களையும் கல்லூரிகள், பள்ளிகள், அலுவலக மனமகிழ் மன்றங்கள் இவையெல்லாம் மேடையேற்றி மகிழலாம்; மகிழ்விக்கலாம். வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் எழுத விரும்புகிறவர்களுக்குப் பயிற்சியாகவும் இந்நூல் அமையும். படித்தும், நடித்தும் மகிழ இந்நூலைப் பரிந்துரைக்கிறேன்.
- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย