ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
ஒரு மனிதனின் வாழ்வென்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறது என்பது அவன் உடல், மற்றும் உயிரைப் பொறுத்தவரை மட்டுமே சரியான விளக்கம் ஆகும். அவனது தினசரி அனுபவங்களிலேயே அவன் இருந்தும் இல்லாத நிலைமையை அவனது ஆழ்ந்த தூக்கத்தில் அனுபவிக்கிறான். ஆனாலும் அவனால் அதை அப்போது விவரிக்க முடியாமல்தான் இருக்கிறான். அதாவது அவனுக்குத் தெரிந்த நிலைகளுக்கும் மேலாக பல நிலைகள் அவனுக்கு இருக்கலாம் என்பதை அவன் தினம் தினம் உணர்கிறான். அதைப் பற்றி மேலும் அறியும் ஆவல் எவருக்கு உதிக்கிறதோ, அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஆற்றும் பணிகள் அனைத்தையும் செவ்வனே செய்து முடிப்பதற்கான முயற்சிகள் அனைத்தையும் கவனத்துடன் எடுப்பார்கள். அது உலகளவில் அவர்களுக்குப் பெயர், புகழ், பணம் போன்ற சிறப்புகளை அள்ளித்தரலாம். ஆனால் அவர்களின் நோக்கமெல்லாம் சிறப்புகள் அனைத்திலும் சிறப்பான “நான் ஏன் பிறந்தேன்?” என்ற கேள்விக்கான பதிலை உணர்வதில்தான் இருக்கும். மற்றவர்கள் சொல்லிக் கேட்பது எதுவுமே புத்தி அளவில் நிற்குமே தவிர, அதுவே அவனை அனுபவத்தில் கொண்டுவிடாது. அந்த அனுபவம் இறுதியில் ஒருவனுக்குக் கிட்டுவதற்குள், அவனுக்குப் பல பிறவிகள் வந்து போகலாம். அவை எதையும் அவன் மனதில் கொள்ளாது, அவன் செய்யும் செயல்கள் எல்லாமே அவனது பழைய வினைகளை முற்றிலும் ஒழித்து, மேலும் புதிய வினைகளைக் கூட்டாமல் இருந்தால், அது அவனை ஞானம் பெறச் செய்து உன்னத நிலைக்குக் கொண்டுசெல்லும். அது கிட்டும் வரை இந்த உலகில் அவனுக்குப் பிறப்பு-இறப்பு உண்டு; அதைத் தவிர்க்கும் ஒரே வழி அவன் அந்த சிறப்பான உன்னத நிலையை எட்டுவதே.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย