ประวัติศาสตร์
இன்றில் இருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்நோக்கி அழைத்துச் செல்லவிருக்கிறது இந்தத் தொடர்.
உலகில், இன்று பழையதாக இருக்கும் எதுவும் பழையதாகவே முடிந்து விடப் போவதில்லை. அதுவொருநாள் புதிய வடிவமெடுக்கும். இன்று புதியதாக இருக்கும் எதுவுமே புதியதாகவே இருந்துவிடப் போவதில்லை. அதுவொருநாள் பழைய வாசம் அடிக்கும்.
இன்று - விஞ்ஞானம் அறிவியல், பொருளாதாரம் என இம்மூன்றில் மட்டுமல்லாமல் உல்லாசம், உபரிச்செலவு, உற்சாக இரவு வாழ்க்கை என அத்தனையிலும் கொடிகட்டிப் பறக்கும் நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் எனும் அமெரிக்க-ஐரோப்பிய வாழ்வியலை, இன்றைய பூகோல முறைப்படி ஆரம்பிக்கும் கடல் கொண்ட லெமூரிய கண்டத்தின் நுனிவாயிலான குமரிக்கண்டத்தில் வாழ்ந்திருக்கின்றனர் நம் மூதாதையர்களின் மூதாதையர்கள்.
இன்று இருக்கும் எல்லாம் அன்றும் இருந்திருக்கிறது. இன்று நிகழும் யாவும் அன்றும் நிகழ்ந்திருக்கிறது. இன்று செய்யப்படுபவைகள் அனைத்தும் அன்றும் செய்யப்பட்டிருக்கிறது.
அன்றைய காலகட்டத்தை இன்றைக்குப் படம்பிடித்து காட்டுவது சங்ககாலப் புலவர்களின் இலக்கியங்கள்தான். மாமூலனார், கபிலர் போன்ற பெரும் புலவர்களும், பெருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநானூறு, அகநானூறு போன்ற இலக்கியங்களும் இல்லாதிருப்பின் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியல் மிகப்பெரிய கருப்பு பக்கங்களாகவே காலத்தின் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
ประวัติศาสตร์
இன்றில் இருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்நோக்கி அழைத்துச் செல்லவிருக்கிறது இந்தத் தொடர்.
உலகில், இன்று பழையதாக இருக்கும் எதுவும் பழையதாகவே முடிந்து விடப் போவதில்லை. அதுவொருநாள் புதிய வடிவமெடுக்கும். இன்று புதியதாக இருக்கும் எதுவுமே புதியதாகவே இருந்துவிடப் போவதில்லை. அதுவொருநாள் பழைய வாசம் அடிக்கும்.
இன்று - விஞ்ஞானம் அறிவியல், பொருளாதாரம் என இம்மூன்றில் மட்டுமல்லாமல் உல்லாசம், உபரிச்செலவு, உற்சாக இரவு வாழ்க்கை என அத்தனையிலும் கொடிகட்டிப் பறக்கும் நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் எனும் அமெரிக்க-ஐரோப்பிய வாழ்வியலை, இன்றைய பூகோல முறைப்படி ஆரம்பிக்கும் கடல் கொண்ட லெமூரிய கண்டத்தின் நுனிவாயிலான குமரிக்கண்டத்தில் வாழ்ந்திருக்கின்றனர் நம் மூதாதையர்களின் மூதாதையர்கள்.
இன்று இருக்கும் எல்லாம் அன்றும் இருந்திருக்கிறது. இன்று நிகழும் யாவும் அன்றும் நிகழ்ந்திருக்கிறது. இன்று செய்யப்படுபவைகள் அனைத்தும் அன்றும் செய்யப்பட்டிருக்கிறது.
அன்றைய காலகட்டத்தை இன்றைக்குப் படம்பிடித்து காட்டுவது சங்ககாலப் புலவர்களின் இலக்கியங்கள்தான். மாமூலனார், கபிலர் போன்ற பெரும் புலவர்களும், பெருநராற்றுப்படை, பட்டினப்பாலை, புறநானூறு, அகநானூறு போன்ற இலக்கியங்களும் இல்லாதிருப்பின் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வியல் மிகப்பெரிய கருப்பு பக்கங்களாகவே காலத்தின் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย