ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
பழம்பெரும் இதிஹாஸமான ராமாயணம் பற்றி தனது காவியத்தில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டுள்ளோர் படிக்க ஏற்ற நூல் இது. இராமாயணம் பற்றிய தொடர் வரிசையில், பால காண்டம் ஒரு பார்வை, வால்மீகியின் அயோத்யா காண்டம் - இரு பாகங்களைத் தொடர்ந்து இந்த கம்பரின் அயோத்தியா காண்டம் முதல் பாகம் வெளி வருகிறது.
இந்த முதல் பாகத்தில் மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம். கைகேயி சூழ்வினைப் படலம், நகர் நீங்கு படலம் ஆகிய நான்கு படலங்கள் இடம் பெறுகின்றன. தசரதன், கூனி, கைகேயி, கோசலை, சுமத்திரை, இராமன், இலக்ஷ்மணன் உள்ளிட்டோர் பற்றி வேறெங்கும் காண முடியாத பல சுவையான விஷயங்களை ஒருங்கு சேர ஒரே இடத்தில் படித்து மகிழும்படி இந்த நூல் அமைந்துள்ளது.
நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் கவியரசர் கண்ணதாசன் ஈறாக பல நூல்கள் மற்றும் அறிஞர்கள் தம் மேற்கோள்களை சரளமாக இந்த நூலில் படித்து மகிழலாம். குடும்பத்தினர் படித்து மகிழ்வதோடு அனைவருக்கும் பரிசாகவும் அளிக்க உகந்த நூல் இது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย