ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
பழம் பெரும் இதிஹாஸமான இராமாயணத்தைப் படிப்பதால் வரும் பயன்களை,
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே
என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் பட்டியலிட்டுக் கூறி இருக்கிறார். நூலாசிரியர் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் இரண்டாம் பாகத்தில் சித்ரகூடத்தை அடைதல், பரதன் வருகை, பரதன் குஹன் சந்திப்பு, பரதன் இராமன் சந்திப்பு உள்ளிட்ட ஆறு அத்தியாயங்களில் மிக மிக சுவையான விவரங்களைத் தருகிறார்.
இராமனின் உறுதி, பரதனின் பாசம், குஹனின் ராம பக்தி, ஜாபாலியின் நாஸ்திக வாதம், அனசூயை - சீதை சந்திப்பு ஆகியவற்றில் வேறெங்கும் காண முடியாத பல விஷயங்களை ஒருசேர இதில் படித்து மகிழலாம். இராமாயண வெண்பா, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண நூல்களிலிருந்தும் பல குறிப்புகளை இதில் காணலாம். இந்த நூல் குடும்பத்தினர் அனைவரும் படிப்பதற்கு ஏற்றது. நண்பர்களுக்கும் இளம் வயதினருக்கும் பரிசாகக் கொடுக்க ஏற்ற நூல் இது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 ธันวาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย