ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
நமது பாரதத்தின் பெருமையை பேற்றும் மஹாபாரதம் வேதங்களில் ஐந்தாவதாகப் போற்றப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த மஹாபாரதத்தில் 149ஆவது அத்யாயமாக இடம் பெற்றுள்ள ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்த போது பகவான் கண்ணன் முன்னிலையில் பஞ்சபாண்டவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் அடங்கியதாகும்.
ஸம்ஸ்க்ருத மொழியில் இருப்பதால் அதன் அர்த்தங்களை முழுமையாக அறிய எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் தொகுத்த ஸ்ரீமான் இளநகர் காஞ்சிநாதன் கவிதை நடை பாராட்டுதற்குரியது. மேலும் இதற்கு HMV ரகு மாமா அவர்கள் இசையமைத்து, ராகமாலிகா வடிவில் 172 பாடல்களை பக்தி ரசம் ததும்பும் குரலில் பாடி, அசத்தி இருக்கும் பாடகர்கள், பாடகியான திருமதி. பத்மஜா பத்மநாபன் ஆகிய அனைவருக்கும் ஸ்ரீமந் நாராயணன் அருள் கிடைத்தது என்பதே உண்மை.
இதைப் படித்து, கேட்டு, பார்த்த வகையில் என்னுடைய பங்கு சிறியதாக இருந்தாலும் இந்த ஜென்மத்தில் பகவான் எனக்குக் கொடுத்த பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். இந்த அரிய முயற்சிக்கு துணை நின்று, அனைவரும் புத்தகத்தை வாங்கிப் படித்து பாடல்களைக் கேட்டு விஷ்ணுவின் அருளைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย