ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
சாரு ஸ்கூல் விட்டு டயர்டாக வந்தாள். அவளுக்கு உடனடியாக பசித்தது. தாத்தா இளநீர் எடுத்துத் தந்தார். “கொல்லையில் தென்னை மரத்திலிருந்து விழுந்த இளநீர் மா” இது என்றார் தாத்தா. “நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங் கொல் என வேண்டா நின்று தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்” என்ற ஒளவையார் பாடலை அழகாகச் சொன்ன சாரு இந்தப் பாட்டுக்கு அரத்தம் என்ன என்றாள். “செய்த உதவிக்கு ரிட்டர்ன் உதவி உடனே எதிர்பார்க்காதே; தென்னம்பிள்ளைக்கு வேர்ப்பகுதில் நீ ஊற்றிய நீர் என்றோ ஒரு நாள் தலையாலே தென்னை மரம் தருவது போல கிடைச்சே தீரும்” என்று உணர்த்தினார்.
சாரு உடனே - “எனக்கு ஒரு சந்தேகம் தாத்தா. நாங்க சின்ன குழந்தைங்க டிபன்பாக்ஸ் சாப்பாடு புடிக்காம சிலசமயம் அப்டியே குப்பையிலே வீசுறோம். அதெல்லாம் உப்புமாச் செடியா மரமா வளர்ந்தால் நிறைய பேரு பசி தீர்ந்து சந்தோஷமா இருப்பாங்க தாத்தா உலகத்துல” “அது சரி! நீ இன்னிக்கு அம்மா கட்டித் தந்த உப்புமாவை கொட்டிட்டாயாக்கும்?!” என்ற தாத்தாவை நோக்கி “க்யூட்!” என்று சிரித்தாள் சாரு.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 เมษายน 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย