ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
พัฒนาตนเอง
"வாழ்க மணமக்கள்" என்கிற இந்தத் திருமண பரிசளிப்பு நூல் எனது நீண்ட நாளைய கனவு. ஏற்கனவே “மணப்பெண்ணே உனக்காக" என்கிற எனது நூலில் மணமகள் அதாவது இளம் குடும்பத்தலைவி தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை, அழகுக் குறிப்பிலிருந்து அடுப்படி அட்வைஸ் வரை எழுதி, வாசகர்களாகிய உங்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று தற்போது ஏழாவது பதிப்பைத் தொட்டு விட்டது. நன்றி.
பொதுவாக உத்தியோகமாகட்டும் சுய தொழிலாகட்டும் தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை குடும்ப அமைதி, நிம்மதியான குடும்ப அமைப்பு உள்ளவர்கள் சாதித்தது ஏராளம். குடும்ப அமைதிக்குத் தேவை கணவன் மனைவி ஒற்றுமை, அன்யோன்யம். தங்களது இல்வாழ்க்கை இனிமையாக அன்பு பெருகி இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத தம்பதியரே இருக்க முடியாது. சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும், அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாகவே குடும்ப வாழ்வு இனிமையாக அமையும். இந்த நூல் உங்களுக்காகவே... உங்கள் இருவரின் நிம்மதியான மணவாழ்விற்காகவே எழுதப்பட்ட நூல். இந்த நூலை... “கற்க... அதன்படி நிற்க" என்று கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகத்தைப் படித்துப் பயன்பெற்ற இனிய தம்பதியினர் அவர்களது கருத்துக்களை எனக்கு எழுதினால் அடுத்தடுத்த பதிப்புக்களில் இடம் பெறச் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
"வாழ்க மணமக்கள்"
“நீடூழி வாழ்க நிம்மதியுடன்"
கீதா தெய்வசிகாமணி
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย