ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இது என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுதியாக மலர்கிறது. ஒரு கணக்குப் பார்த்தால், நான் எண்ணிக்கையில் அதிகமான சிறுகதைகளை எழுதி விடவில்லைதான். ஒரு நூறைச் சற்றே தாண்டலாம், அவ்வளவே. ஆயினும் ஆரோக்கியமான சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையும், சந்தோஷமும் நிறையவே இருக்கிறது.
மிகப் பெரும்பாலான கதைகள் நான் பழகிய, பழகும் மனிதர்களை நினைவூட்டக் கூடும். நிஜமான வாழ்க்கையிலேயே ஏராளமாய் சுவைகள் மலிந்துள்ளபோது, கற்பனையை வலிந்து போய்த் தேடிக் கொண்டிருப்பானேன்? எனினும் அறிவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள சில கதைகள் அதற்கு விலக்கானவை என்று தோன்றலாம். அது முழுமையான உண்மையில்லை, ஒரளவு என்னுள், என்னைச் சுற்றி ஏற்படுகிற உணர்வுகளை மையப்படுத்தியே அறிவியலையும் எடுத்துக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள 'பூச்சி...', 'தொட்டில்' இரண்டும் அவ்வகையில்....
என்னைப் படிக்கிறவர்களுக்கு எப்போதும் நன்றி; எப்படி விமர்சித்தாலும் சரியே!
ஸாயிரம்!
மிக்க அன்புடன்
- சுப்ர. பாலன்
วันเปิดตัว
อีบุ๊ก: 18 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
