Step into an infinite world of stories
Non-fiction
ஈஶ்வரனின் அடியார்களில் நால்வர் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் திருநாவுக்கரச பெருமான், சுந்தரரமூர்த்தி ஸ்வாமிகள், திருஞானசம்பந்தர பெருமான், மாணிக்கவாசகப் பெருமான். இந்த நால்வரின் புண்ணிய சரித்திரங்களை பெரிய புராணம் எவ்விதமாக விவரித்திருக்கிறதோ அதே விதமாக எளிய தமிழில் அனைவருக்கும் பயன்படுவதற்காக எழுதவேண்டும் என்ற எண்ணம் ஈசனருளால் ஏற்பட்டது. சுந்தரமூர்த்தி நாயனாரின் சரித்திரம் சுந்தரர் (சங்கரன் தோழன்) என்ற புத்தகமாக புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் இருவருடைய சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. வாழ்காலம் ஒன்றாக இருப்பதாலும் பல இடங்களில் இருவர் சந்தித்து, சேர்ந்திருந்து அடியார்கள் பலருக்கு ஈஷ்வரனுடைய பெருமைகளை உணர்த்தியிருப்பதாலும் இருவரையும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
பெரியபுராணத்தில் ஈஶ்வரன் திருநாவுக்கரசா என்று மருள் நீக்கியாரை அழைத்ததும் அப்பெயர் நிலைபெற்றது. அவரை குழந்தை ஞானசம்பந்தப்பெருமான் 'அப்பரே' என்று அழைத்ததால் நாம் அப்பர் என்றும் அழைக்கின்றோம். சேக்கிழார் ஆளுடையரசர் என்கிறார். ஆளுடை என்பது ஈஶ்வரனைக் குறிக்கிறது.
அதேபோல ஞானசம்பந்த பெருமானை ஆளுடைப்பிள்ளை என்கிறார் சேக்கிழார். இவ்விரண்டு சொல்லாடல்களும் மிக அழகாக இருந்ததால், செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் இனிதே என்ற வகையில் இவ்விரு அடியார்களின் புண்ணிய சரித்திரத்திற்கு ஆளுடையரசரும் ஆளுடைப்பிள்ளையும் என்று பெயரிடப்பட்டது.
இப்புத்தகத்தை வாசித்து இன்புறும் அனைவர்க்கும் இறையருள் பரிபூரணமாகக் கிடைக்க என் மனமார்ந்த ப்ரார்த்தனைகள்.
Release date
Ebook: March 19, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International