Step into an infinite world of stories
இந்த தலைமுறையினருக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து, நாட்டில் எடுக்கப்பட்ட, மிகப்பெரும் தாக்கம் கொடுத்த, அரசு முடிவுகளில் முதன்மையானது, 2016 நவம்பர் மாதம் அறிவிக்கபட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையான ‘டிமானிடைஷேசன்’ தான்.
அறிவித்த நாள் தொடங்கி இன்றுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் பேசு பொருளாகிவிட்டது அது. மிகப் பெரும் முடிவு மட்டுமல்ல, மிக முக்கியமான முடிவும் கூட.. இதைப்பற்றி பல்வேறுசமயங்களில் நான் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும், பத்திரிக்கைகள் வாயிலாகவும் என் கருத்துகளை பகிர்ந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில், இதன் பலன்களை மட்டும் உணர்ந்தவனாக இருந்தேன். அதனால் ஆதரித்துப் பேசினேன். ஓராண்டு முடிவதற்குள் இந்த நடவடிக்கை குறித்து கூடுதலாக தெரிந்துகொண்டவன், தந்தி தொலைக்காட்சி நடத்திய, பொதுமக்கள் மத்தியில் சென்னையில் நடந்த,’மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில் ’இந்த நடவடிக்கையால் மக்களுக்கு சிரமமே’ என்ற அணியில் பேசினேன். தொடர்ந்து இரண்டாம் ஆண்டு நாளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதன் சிரமங்களைப் பற்றியே அதிகம் பேசினேன். என்னுடைய அலுவலகத்தில் அமர்ந்து சில விவரங்கள் தேடிக்கொண்டிருந்த போதுதான், இரண்டு ஆண்டுகளாக ஊடங்களில் பகிர்ந்துகொள்வதற்காக பணமதிப்பழிப்பு நடவக்டிகை மற்றும் தன் தாக்கங்கள் குறித்து கணிசமாக அளவு தரவுகள், தகவல்கள் சேர்ந்திருப்பதை கவனித்தேன்.
மேலும் நம் காலத்தில் நடந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தேன். இதெல்லாம் 2018 செப்டெம்பர் மாதத்தில். கிழக்க்குப் பதிப்பகத்தில் விவரம் சொல்ல, ’உடனே எழுங்கள்’ என்றார்கள்.
வேறு எந்தப் புத்தகத்தைக் காட்டிலும் என்னை அதிகம் வேலை வாங்கிய புத்தகம் இது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக இரவு பகல் இதே வேலைதான். அத்தியாயங்கள் வரிசைப்படுத்துதலில் அதிக நேரம் ஆனது. ஒரு நேரம், ’இதை எப்போது முடிப்போம், வேறு வேலைகள் செய்யலாம்’ என்று நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. ஆனாலும், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாந்த நடவடிக்கையை பதிவு செய்கிறோம் என்கிற பெருமிதத்துடன் முடித்துவிட்டேன்.
இது குறித்து உங்களிடம் கூடுதல் அல்லது மாற்றுத் தரவுகள் மற்றும் பகிர்ந்துகொள்ளத்தக்க நேரடி அனுபவங்கள் இருந்தால் writersomavalliappan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
புத்தகம் குறித்தும் நீங்கள் எனக்கு எழுதலாம்.
Release date
Ebook: September 15, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International