Step into an infinite world of stories
உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரம் நான் எழுதிய நூல்களிலேயே மிக வேறுபட்டது. மிக பவித்ரமானதும் கூட... அடிப்படையில் நான் ஒரு தமிழ் நாவலாசிரியன். அதாவது எழுத்தாளன். பெரும்பாலும், எழுத்தாளர்கள் இடது சார்பு கொண்டிருப்பார்கள். வழிவழியாக வரும் நம்பிக்கைகளை கேள்வியாய் கேட்பார்கள். அவைகளை மறுதலித்துவிட்டு ஒரு புதுவழியில் நடப்பார்கள். கடவுள் விஷயத்தில் பெரிதாக மண்டையை உடைத்துக்கொள்ள மாட்டார்கள். கடவுள் இருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்தே பெரும்பாலும் இவர்களிடம் இருக்கும்.
இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த நாளிலேயே தங்களை பொதுமைப்படுத்திக்கொண்ட எழுத்தாளர்களைக் கண்ட நாடு இது. இன்றும் எழுத்தாளன் என்பவன் ஒரு பொதுமை விரும்பியாகவே காணப்படுகிறான். நானும் அதற்கு விதிவிலக்கில்லை. அதே சமயம், என் ஆன்மீக நம்பிக்கைகளை நான் மூடிமறைத்துக் கொண்டதேயில்லை. அதன் தொடர்பாக என் கேள்விகளையும் நான் அப்படியே சுமந்து திரியவில்லை. என் நம்பிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் ஆன்மீகத்தில் நல்ல பதில் கிடைக்கவே செய்தது. கெளதம புத்தர் கூட எனக்குள் பல இடங்களில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ஆனால் ஒரு அத்வைதியான மகாபெரியவர் மட்டுமே என்னுள் விசுவரூபமெடுத்து நின்றார். என் சகல குழப்ப ரோகங்களுக்கும் அவரே நிவாரணியாகவும் திகழ்ந்தார்.
அவரது தெய்வத்தின் குரல் என்வரையில் அசலான தெய்வத்தின் குரல். அந்த தெய்வத்தின் குரலை வியந்தேன். அதுதான் சந்திரசேகரமாகிவிட்டது. ஒருவரை நமக்குப் மிகப் பிடித்துவிட்டால் அவர்களது குணப்பாடுகளை நாம் வியப்பது இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் காந்தியை வியந்தும், காமராஜரை வியந்தும் தாகூரை வியந்தும், பாரதியை வியந்தும் பல நூல்கள் வந்துள்ளன.
அப்படி நான் பெரியவரை வியந்ததாகக் கூறலாம் தான். ஆனால் மனிதராகப் பிறந்து நல்ல மனிதராக வாழ்ந்தவர்களை வியப்பதற்கும், அம்மட்டில் பல படிகள் மேலேறி தெய்வத்தன்மையை அடைந்துவிட்டவர்களை வியப்பதற்கும் பெரிய வேற்றுமை உள்ளது. குறிப்பாக எது ஆன்மீகம்? அது ஏன் மனிதனுக்கு தேவை?
அதனால் அவன் என்னவாகிறான்?” - போன்ற கேள்விகளுக்கு பெரியவரின் பதிலை விட எளிய, புரியும்படியான தெளிவான, திடமான ஒரு பதிலை என்வரையில் எவரும் சொன்னதில்லை என்றால் மற்ற ஆன்மிகப் பெரியவர்கள் எல்லாம் சராசரிகளா... பெரியவர் மட்டும்தான் பெரிய்ய்யவரா...? என்று யாரும் சினந்து என்னை கேட்டு விடக்கூடாது. நானும் அந்தப் பொருளில் சொல்லவில்லை. இதை எழுதும் நானே கூட வைணவ மரபின் வழிவருபவன். எனது ஆச்சார்ய பெருமக்களையே என் சத்குருநாதர்களாகவும் வரித்திருப்பவன். இவர்களிடம் நான் வியந்தவைகளும் நெகிழ்ந்தவைகளும் ஏராளம்... ஏராளம்...
அதே சமயம் மகா பெரியவருக்குக் கிடைத்த ஒரு நெடிய வாய்ப்பும் போக்கும் மற்றையோர்க்கு சித்திக்கவில்லை என்பதே உண்மை. பன்னிரண்டு வயதில் துறவறம்! அதன்பின் 88 ஆண்டுகளுக்கு சன்யாசம் வாழ்க்கை என்று “நெடிய 88 கால வாழ்வை பெரியவர் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதனால் பாரத தேசம் முழுக்க மிக அதிகம் நடக்க இவரால் முடிந்தது. மிக அதிகம் பேசவும் சரி, மெளனமாக தவத்தில் ஈடுபடவும் இவரால் முடிந்தது. அடுத்து இவரிடம் காணப்பட்ட எளிமை மற்றும் சரித்ர புராண, விஞ்ஞான ஞானமும் ஆழமும் இந்த நெடிய கால அனுபவத்தோடு கலந்து பத்தரைமாற்றத் தங்கமாக வெளிப்பட்டது. அந்தத் தாக்கம் தான் தெய்வத்தின் குரல் நூலாகும். இந்த அளவிற்கான பாகம் பாகம்பாகமான நூலை வேறு எவரும் வெளியிட வாய்ப்பும் அமைய வில்லை. இதெல்லாம் தான் பெரியவரை நாம் எளிதாகவும் வலிமையோடும் நெருங்க பெரும் காரணமாகி விட்டது.
தெய்வத்தின் குரலுக்கு இணையாக நான் திரு முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியாரின ‘குறையொன்றுமில்லை’யை வியந்திருக்கிறேன். ஆனால் காலம் அவரை மிகச் சிறிய வயதிலேயே அழைத்துச் சென்றுவிட்டது. அவருக்கு தீர்க்க ஆயுளை அளித்திருந்தால் ஆன்மீக உலகில் அவரும் தெய்வத்தின் குரல்போல பல அரிய ஆன்மீக நெறிபாடுள்ள நூல்களை தந்திருப்பார். அதெல்லாம் நம்மையும் மிகப் பிரகாசப்படுத்தியிருக்கும்.
இம்மட்டில் காலத்தை வென்ற ஒருவராக பெரியவரை மட்டும் காலம் அடையாளம் காட்டுகிறது. அந்த ஞானியும் தன் கடப்பாட்டில் நூலளவு சிடுக்குக்கும் இடம் தராமல் மிகச் சிறந்த சன்யாசிக்கு இலக்கணமாகவும், குருநாதருக்கு இலக்கணமாகவும் மனிதருக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து விட்டு இப்போதும் ஸ்தூலமின்றி சூட்சமமாக நடமாடியபடி உள்ளார்.
அந்த சூட்சமத்தை இன்றைய விஞ்ஞானத் தாக்கங்களோடு நான் உணர்ந்ததைக் கொண்டே இந்த சந்திர சேகரத்தை எழுதினேன்.
Release date
Ebook: February 15, 2022
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International