Step into an infinite world of stories
Religion & Spirituality
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நன்கு நீராட வேண்டும். நித்ய கர்மாக்களை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. எனவே ஏகாதசிக்கு முதல் நாளே பூசைக்கு வேண்டிய துளசி இலைகளைப் பறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மகா விஷ்ணுவிற்கு முறைப்படி பூஜை செய்ய வேண்டும். நீரை மட்டும் அருந்தி உபவாசம் (விரதம்) இருப்பது உத்தமம். சிலர் பழங்களை நிவேதம் செய்வர். மத்யமம் என்று இது அழைக்கப்படுகிறது. பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை புசிப்பது அதமம் (நல்லது). சிலர் ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவில் உபவாசம் இருப்பதும் உண்டு. ஏகாதசி அன்று எவருக்கும் அன்னதானம் செய்யக் கூடாது. பகலில் தூங்கக் கூடாது. இரவில் பக்தி கீர்த்தனைகளை பாடுவதும், புண்ணிய கதைகளை கேட்பது என்று இரவு முழுவதும் கண் விழித்து, கோபம், கொடூரமான வார்த்தைகளை பேசுதல், கலகம் செய்வது, பெண்ணோடு புணர்தல், தாம்பூலம், மாலை, சந்தனம், கண்ணாடி பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
எப்போதும் இறைவனது திருநாமத்தை மனதில் நினைத்த வண்ணம் இருந்திடல் வேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று காலைக் கடனை முடித்துவிட்டு இறைவனுக்கு பூஜை செய்து முடித்து ஒரு அதிதிக்கு (நல்ல நபர்) அன்னம் அளிக்க வேண்டும். அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு ஏகாதசி அன்றும் விரதம் இருந்து புசிப்பதால், தேக ஆரோக்கியம் உண்டாகும். பாவங்கள் அகலும், செல்வம் பெருகும், சொர்க்கம் கிடைக்கும், மனம் நிர்மலமாகும். சந்ததி பெருகும், ஞானம் பெருகும், மோட்சம் கிட்டும்.
Release date
Ebook: February 5, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International