5
Religion & Spirituality
பச்சைப்புடவைக்காரியின் அருளைப் பற்றிய மூன்றாம் பாகம்தான் 'பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை', பல உயிர்களையும் பலருடைய வாழ்வாதாரங்களையும் கொள்ளை கொண்ட பெருந்தொற்று நோய் எப்படி வந்தது என்று இதில் பச்சைப்புடவைக்காரி சொல்கிறாள். கணவனால் வஞ்சிக்கப்பட ஒரு அபலைப் பெண் அன்னையின் அருள்வேண்டி அழுதபோது அவளைத் தன் சிம்ஹ வாகனத்தில் ஏற்றி அவள் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து அந்தியையும் தீமையையும் சம்ஹாரம், செய்கிறாள். சாமியாடிய ஒரு பெண்ணை நான் கேலி செய்தபோது என்னையே சாமியாட வைக்கிறாள். இன்னொரு சமயம் ஒரு போலிச் சாமியாடியின் முகத்திரையைக் கிழிக்க என்னைத் தன் சூலாயுதமாகப் பயன்படுத்தும் நிகழ்வும் இருக்கிறது. 'தன் உண்டியலையே காப்பாற்றிக்கொள்ள சக்தியில்லாதவள் நம்மை எப்படிக் காப்பாள்?' என்று அறியாப் பெண் ஒருத்தி கேலி செய்தபோது அவளுக்குச் சிறந்த ஆன்மிகப் புரிதலைத் தருகிறாள், 'இன்னும் ஒரு வாரத்தில் உன் காலம் முடிந்துவிடும்' என்ற அதிர்ச்சியை எனக்குக் கொடுத்து மரணத்தைவிட அன்பு வலியது என்பதை உணர வைக்கிறாள். ஆன்மிகத்தை வியாபாரமாக்கும் முயற்சியில் எனக்கு ஆசைகாட்டித் தெளிய வைக்கிறாள். முத்தாய்ப்பாக ராஜமாதங்கியாகக் காட்சி தருகிறாள். அவளுக்காக எத்தனையோ கவிஞர்களும் மகான்களும் ஞானிகளும் காத்துக் கொண்டிருக்கும்போது 'நான் ஒரு செவிலிப் பெண்ணிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொல்லி, 'அன்பே நான். நானே அன்பு' என்ற ஞானத்தின் உச்சத்தைத் தொட வைக்கிறாள். 'பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை' - படிக்கும் புத்தகம் அல்ல. ஆன்மிக நாட்டம் உள்ள ஒவ்வொருவரும் வாழவேண்டிய வாழ்க்கை.
Release date
Ebook: December 19, 2022
5
Religion & Spirituality
பச்சைப்புடவைக்காரியின் அருளைப் பற்றிய மூன்றாம் பாகம்தான் 'பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை', பல உயிர்களையும் பலருடைய வாழ்வாதாரங்களையும் கொள்ளை கொண்ட பெருந்தொற்று நோய் எப்படி வந்தது என்று இதில் பச்சைப்புடவைக்காரி சொல்கிறாள். கணவனால் வஞ்சிக்கப்பட ஒரு அபலைப் பெண் அன்னையின் அருள்வேண்டி அழுதபோது அவளைத் தன் சிம்ஹ வாகனத்தில் ஏற்றி அவள் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து அந்தியையும் தீமையையும் சம்ஹாரம், செய்கிறாள். சாமியாடிய ஒரு பெண்ணை நான் கேலி செய்தபோது என்னையே சாமியாட வைக்கிறாள். இன்னொரு சமயம் ஒரு போலிச் சாமியாடியின் முகத்திரையைக் கிழிக்க என்னைத் தன் சூலாயுதமாகப் பயன்படுத்தும் நிகழ்வும் இருக்கிறது. 'தன் உண்டியலையே காப்பாற்றிக்கொள்ள சக்தியில்லாதவள் நம்மை எப்படிக் காப்பாள்?' என்று அறியாப் பெண் ஒருத்தி கேலி செய்தபோது அவளுக்குச் சிறந்த ஆன்மிகப் புரிதலைத் தருகிறாள், 'இன்னும் ஒரு வாரத்தில் உன் காலம் முடிந்துவிடும்' என்ற அதிர்ச்சியை எனக்குக் கொடுத்து மரணத்தைவிட அன்பு வலியது என்பதை உணர வைக்கிறாள். ஆன்மிகத்தை வியாபாரமாக்கும் முயற்சியில் எனக்கு ஆசைகாட்டித் தெளிய வைக்கிறாள். முத்தாய்ப்பாக ராஜமாதங்கியாகக் காட்சி தருகிறாள். அவளுக்காக எத்தனையோ கவிஞர்களும் மகான்களும் ஞானிகளும் காத்துக் கொண்டிருக்கும்போது 'நான் ஒரு செவிலிப் பெண்ணிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொல்லி, 'அன்பே நான். நானே அன்பு' என்ற ஞானத்தின் உச்சத்தைத் தொட வைக்கிறாள். 'பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை' - படிக்கும் புத்தகம் அல்ல. ஆன்மிக நாட்டம் உள்ள ஒவ்வொருவரும் வாழவேண்டிய வாழ்க்கை.
Release date
Ebook: December 19, 2022
Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
English
International