Step into an infinite world of stories
Fiction
சென்னையில் முதல் பெண் டாக்டரான ஈ.வி.கல்யாணி தனது அனுபவத்தில் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த பிரசவங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர். அவருடைய மருத்துவ ஆலோசனைகளை நான் மணியன் மாத இதழுக்காகப் பேட்டி கண்டு பெற்று வெளியிட்டேன். சமீபத்தில் டாக்டர் ஈ.வி.கல்யாணியின் மறைவை ஒட்டி, இந்தப் பேட்டி 'மங்கையர் மலர்' மாத இதழில் வெளிவந்தபோது, சில நண்பர்கள், இந்த முக்கியமான துறையில் அனுபவம் வாய்ந்த டாக்டர்களை அணுகி, அவர்களிடமிருந்து பெண்களுக்கு உதவக்கூடிய பயனுள்ள ஆலோசனைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்று கூறினார்கள்.
இன்று விஞ்ஞான ரீதியாகச் செயற்கை முறையில் கருவை உருவாக்குவதில் புகழ்பெற்றுள்ள டாக்டர் கமலா செல்வராஜின் பேட்டி இந்தத் தொகுப்பில் இடம் பெறுகிறது. குழந்தைப் பிரசவம் - தாய் சேய் - நலம் ஆகியவற்றில், வெளி நாடுகளிலும் பணி புரிந்து அனுபவம் பெற்ற டாக்டர் மஞ்சுளாதேவி நந்த குமாரின் பேட்டியும் உள்ளது. இன்று கல்யாணி நர்ஸிங் ஹோமை நிர்வாகித்து அரிய தொண்டாற்றி வரும் டாக்டர் கீதா அர்ஜுனனின் அனுபவப் பூர்வமான ஆலோசனைகளும் இடம் பெறுகின்றன.
ஹோமியோபதி மூலம் பிள்ளை பேறு பற்றியும், பிரசவம் குறித்தும், பயன்தரக் கூடிய மருந்துகளைப் பற்றி டாக்டர் அ. இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
பிரசவம் நல்ல முறையில் நிறைவேறினாலும், பிறந்த குழந்தைக்குச் சில சமயம் சிக்கல்கள் தோன்றக்கூடும். அந்த நிலையில் உடனடியாக மருத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதை நல்ல முறையில் சிறப்பாகச் செய்து வரும் சைல்ட் - டிரஸ்ட் - மருத்துவமனை (தற்போது காமகோடி பீட சங்கராச்சாரிய சுவாமிகளின் உதவியினாலும் ஆசியினாலும் அருள் தொண்டாற்றிவரும் மருத்துவமனை) எப்படி அளிக்கிறது என்பது பற்றிய அரிய கட்டுரையும் இத்துடன் வெளிவருகிறது.
என்னுடன் சேர்ந்து, பேட்டிகளைக் கண்டு தொகுக்க திருமதி. ஜெயஸ்ரீ விசுவநாத், திருமதி. ராஜ்யஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் உதவியுள்ளார்கள். இத்துறையில் அனுபவம் வாய்ந்த அவர்களுடைய எழுத்துப்பணி இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
Release date
Ebook: May 17, 2021
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International