Fiksi
தனது இரண்டு மகன்களும் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் மொத்த சொத்தையும் அவர்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு மூத்தவனுடன் வாழ்கிறார் வெள்ளிங்கிரி. மாமனார், மற்றும் மாமியார் பேச்சைக் கேட்டு மனம் கெட்டு, தந்தையைத் துரத்தி விடுகிறான் மூத்தவன்.
இளைய மகனிடம் வெள்ளிங்கிரி தஞ்சம் புக, அவனும் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தந்தையை துரத்தி விடுகிறன். அனாதையாய்த் தெருத் தெருவாய் அலைந்து விட்டு, அந்த ஊரை விட்டே போய் விடும் எண்ணத்தில் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கிருந்த பெஞ்சில் அமர்கிறார். அங்கே, ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஒரு வயதான பெண்மணியைக் காப்பாற்றுகிறார். அவளும் தன்னைப் போலவே மகனால் துரத்தி விடப்பட்டவள் என்பதையறிந்து அவள் மீது இரக்கம் கொள்கிறாள்.
இருவரும் “இவர்களுக்கு பயந்து நாம் ஏன் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும்?..இங்கேயே ஒருவருக்கொருவர் ஆதரவாய் என்று முடிவெடுத்து, விகல்பமில்லாத அன்போடு, ஊருக்கு வெளியே ஒரு குடிசை போட்டு வாழ்கின்றனர்.
விஷயம் கேள்விப்பட்டு பெருத்த அவமானத்திற்குள்ளான வெள்ளிங்கிரியின் மகன்கள் கோபாவேஷமாய் வந்து, அவர் இல்லாத போது அந்தப் பெண்மணியைத் தாக்கி விட்டு, குடிசையையும் சிதைத்து விட்டுச் செல்கின்றனர்.
குடிசைக்குத் திரும்பி வந்த வெள்ளிங்கிரி அந்தப் பெண்மணியைக் கண்டாரா?...
மனதை நெகிழச் செய்யும் அந்த முடிவு இந்த நாவலின் சிறப்பு. வாசியுங்கள்.
Tanggal rilis
buku elektronik : 5 Februari 2020
Fiksi
தனது இரண்டு மகன்களும் தன்னைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் மொத்த சொத்தையும் அவர்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு மூத்தவனுடன் வாழ்கிறார் வெள்ளிங்கிரி. மாமனார், மற்றும் மாமியார் பேச்சைக் கேட்டு மனம் கெட்டு, தந்தையைத் துரத்தி விடுகிறான் மூத்தவன்.
இளைய மகனிடம் வெள்ளிங்கிரி தஞ்சம் புக, அவனும் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தந்தையை துரத்தி விடுகிறன். அனாதையாய்த் தெருத் தெருவாய் அலைந்து விட்டு, அந்த ஊரை விட்டே போய் விடும் எண்ணத்தில் அந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கிருந்த பெஞ்சில் அமர்கிறார். அங்கே, ரயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஒரு வயதான பெண்மணியைக் காப்பாற்றுகிறார். அவளும் தன்னைப் போலவே மகனால் துரத்தி விடப்பட்டவள் என்பதையறிந்து அவள் மீது இரக்கம் கொள்கிறாள்.
இருவரும் “இவர்களுக்கு பயந்து நாம் ஏன் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும்?..இங்கேயே ஒருவருக்கொருவர் ஆதரவாய் என்று முடிவெடுத்து, விகல்பமில்லாத அன்போடு, ஊருக்கு வெளியே ஒரு குடிசை போட்டு வாழ்கின்றனர்.
விஷயம் கேள்விப்பட்டு பெருத்த அவமானத்திற்குள்ளான வெள்ளிங்கிரியின் மகன்கள் கோபாவேஷமாய் வந்து, அவர் இல்லாத போது அந்தப் பெண்மணியைத் தாக்கி விட்டு, குடிசையையும் சிதைத்து விட்டுச் செல்கின்றனர்.
குடிசைக்குத் திரும்பி வந்த வெள்ளிங்கிரி அந்தப் பெண்மணியைக் கண்டாரா?...
மனதை நெகிழச் செய்யும் அந்த முடிவு இந்த நாவலின் சிறப்பு. வாசியுங்கள்.
Tanggal rilis
buku elektronik : 5 Februari 2020
Masuki dunia cerita tanpa batas
Belum ada ulasan
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia