Religion & Spirituality
கோயில்களில் தெய்வங்களுக்குத் திருமண உத்ஸவங்கள் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறோம், பங்கேற்றிருக்கிறோம். நமக்கு பிறவி கொடுத்து, நம் வாழ்க்கையில் நற்சம்பவங்கள் எல்லாம் நடைபெற வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்த தெய்வத்தை நாம் நம்மில் ஒருவராகவே பாவித்து நமக்கு ஏற்படும் நல்லனவற்றை எல்லாம் அந்தக் கடவுளுக்கும் ஏற்படுத்தி மகிழ்ந்து, நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அப்படி நன்றி தெரிவிக்கும் முறைகளில் ஒன்றுதான் கோயில்களில் நாம் நடத்தி வைக்கும் தெய்வத் திருமணங்கள். மனித சம்பிரதாயம் போலவே எல்லா நடைமுறைகளையும் மேற்கொண்டு நடத்தப்படும் இந்த தெய்வத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு பக்தரும் அது தம் வீட்டுத் திருமணமாகவே அனுசரித்து சந்தோஷப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
புராணங்களில், மனித வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தெய்வீகக் காதலும் திருமணமும் நடைபெற்ற சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அப்படி அந்த நிகழ்ச்சிகளை விவரிப்பதன் முக்கிய நோக்கமே, இறைவனிடம் நாம் கொண்டுள்ள ஈடுபாட்டைக் காட்டுவதுதான்; காதலாகிக் கசிந்து நம் பக்தியை இறைவனிடம் நாம் சமர்ப்பிக்கும் பண்பை விளக்குவதுதான். இறைவனிடம் நம்மையே அடையாளம் காணும் சந்தோஷம்தான், இறைவனுக்கு நாம் செய்யும் அர்ச்சனை, நைவேத்யம், கொண்டாட்டம், திருமண உத்ஸவம் எல்லாம்.
தெய்வங்களின் திருமணங்களையும் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே நாம் பார்க்கும் முயற்சிதான், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கடவுளர் கல்யாணங்கள் பற்றிய புத்தகம்.
- பிரபு சங்கர்
Release date
Ebook: 18 May 2020
Religion & Spirituality
கோயில்களில் தெய்வங்களுக்குத் திருமண உத்ஸவங்கள் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறோம், பங்கேற்றிருக்கிறோம். நமக்கு பிறவி கொடுத்து, நம் வாழ்க்கையில் நற்சம்பவங்கள் எல்லாம் நடைபெற வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்த தெய்வத்தை நாம் நம்மில் ஒருவராகவே பாவித்து நமக்கு ஏற்படும் நல்லனவற்றை எல்லாம் அந்தக் கடவுளுக்கும் ஏற்படுத்தி மகிழ்ந்து, நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அப்படி நன்றி தெரிவிக்கும் முறைகளில் ஒன்றுதான் கோயில்களில் நாம் நடத்தி வைக்கும் தெய்வத் திருமணங்கள். மனித சம்பிரதாயம் போலவே எல்லா நடைமுறைகளையும் மேற்கொண்டு நடத்தப்படும் இந்த தெய்வத் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு பக்தரும் அது தம் வீட்டுத் திருமணமாகவே அனுசரித்து சந்தோஷப்படுவதையும் நாம் பார்க்கிறோம்.
புராணங்களில், மனித வாழ்க்கையை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தெய்வீகக் காதலும் திருமணமும் நடைபெற்ற சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அப்படி அந்த நிகழ்ச்சிகளை விவரிப்பதன் முக்கிய நோக்கமே, இறைவனிடம் நாம் கொண்டுள்ள ஈடுபாட்டைக் காட்டுவதுதான்; காதலாகிக் கசிந்து நம் பக்தியை இறைவனிடம் நாம் சமர்ப்பிக்கும் பண்பை விளக்குவதுதான். இறைவனிடம் நம்மையே அடையாளம் காணும் சந்தோஷம்தான், இறைவனுக்கு நாம் செய்யும் அர்ச்சனை, நைவேத்யம், கொண்டாட்டம், திருமண உத்ஸவம் எல்லாம்.
தெய்வங்களின் திருமணங்களையும் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே நாம் பார்க்கும் முயற்சிதான், புராணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கடவுளர் கல்யாணங்கள் பற்றிய புத்தகம்.
- பிரபு சங்கர்
Release date
Ebook: 18 May 2020
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India