Lyric Poetry & Drama
வணக்கம்
சரித்திரம் என்பது மன்னர்கள் செய்தது மாத்திரமல்ல.
மன்னர்கள் செய்த சாதனைகள், அதிசயங்கள் எல்லாம் கல்வெட்டுகளிலும் பனை ஒலை பழஞ்சுவடிகளும் கல்வெட்டு வாசகங்களும் இல்லாத காரணத்தால் அந்த மக்களின் வாழ்க்கை இருள் மூடிக்கிடக்கிறது. அந்த மக்கள் செய்த சரித்திரங்களும், மக்களால் சொல்லப்படும் நிஜங்களுமே இந்தத் தொடர்பின் சாரம்!
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பாதிப்பு உண்டு! அவை அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் தலை முறையாய் அந்த சம்பவங்கள் வயதானவர்களால் வாலிபர்களுக்கு சொல்லப்பட்டு காலம் காலமாய் பயணமாகும்!
அந்த கதைகள் நடந்தவையாக நிஜங்களாக சில இதயங்களுக்குள் வாழ்ந்து வரும்! அப்படிப்பட்ட ஊருக்கு ஒரு நிஜத்தைக் தேடி எடுத்து எழுத நினைத்த்தே இந்தத் தொடர் உருவாக முதல் பொரி!
அப்படி ஊர் ஊராய் அறிந்தவர் அறியாதவர் என அனைவரிடமும் விசாரித்து கேட்ட போது அவர்களில் சிலர் சொன்ன சம்பவங்கள் சரித்திரங்களை விட பிரமிப்பாய் வியப்பாய் பாதிப்பாய் இருந்தன.
இந்த சம்பவங்களுக்கு ஆதாரமில்லை! இவைகள் அவ்வூர் பகுதியில் உள்ள ஒரு சிலருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ தெரிந்த செய்திகளாக இருக்கலாம்! காது வழி கேட்ட கனமான நிகழ்வுகளை கவிதை மூலம் நிறம் கூட்டி கொஞ்சம் திரைக்கதை அமைத்த போது இந்த எழுத்தோட்டம் உருவானது. ஒரு சில சம்பவங்களில் சமுதாயம் கருதி ஊர் அல்லது நபர்களின் பெயர்களை மாற்றம் செய்திருக்கிறேன்!
இதை நம்பினால் நிஜம்! நம்பாவிட்டால் கதை! நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு முன்னுரையை முடிக்கிறேன்.
என்றும் அன்புடன்
பா.விஜய்
Release date
Ebook: 23 December 2019
Lyric Poetry & Drama
வணக்கம்
சரித்திரம் என்பது மன்னர்கள் செய்தது மாத்திரமல்ல.
மன்னர்கள் செய்த சாதனைகள், அதிசயங்கள் எல்லாம் கல்வெட்டுகளிலும் பனை ஒலை பழஞ்சுவடிகளும் கல்வெட்டு வாசகங்களும் இல்லாத காரணத்தால் அந்த மக்களின் வாழ்க்கை இருள் மூடிக்கிடக்கிறது. அந்த மக்கள் செய்த சரித்திரங்களும், மக்களால் சொல்லப்படும் நிஜங்களுமே இந்தத் தொடர்பின் சாரம்!
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பாதிப்பு உண்டு! அவை அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் தலை முறையாய் அந்த சம்பவங்கள் வயதானவர்களால் வாலிபர்களுக்கு சொல்லப்பட்டு காலம் காலமாய் பயணமாகும்!
அந்த கதைகள் நடந்தவையாக நிஜங்களாக சில இதயங்களுக்குள் வாழ்ந்து வரும்! அப்படிப்பட்ட ஊருக்கு ஒரு நிஜத்தைக் தேடி எடுத்து எழுத நினைத்த்தே இந்தத் தொடர் உருவாக முதல் பொரி!
அப்படி ஊர் ஊராய் அறிந்தவர் அறியாதவர் என அனைவரிடமும் விசாரித்து கேட்ட போது அவர்களில் சிலர் சொன்ன சம்பவங்கள் சரித்திரங்களை விட பிரமிப்பாய் வியப்பாய் பாதிப்பாய் இருந்தன.
இந்த சம்பவங்களுக்கு ஆதாரமில்லை! இவைகள் அவ்வூர் பகுதியில் உள்ள ஒரு சிலருக்கோ அல்லது ஒருவருக்கு மட்டுமோ தெரிந்த செய்திகளாக இருக்கலாம்! காது வழி கேட்ட கனமான நிகழ்வுகளை கவிதை மூலம் நிறம் கூட்டி கொஞ்சம் திரைக்கதை அமைத்த போது இந்த எழுத்தோட்டம் உருவானது. ஒரு சில சம்பவங்களில் சமுதாயம் கருதி ஊர் அல்லது நபர்களின் பெயர்களை மாற்றம் செய்திருக்கிறேன்!
இதை நம்பினால் நிஜம்! நம்பாவிட்டால் கதை! நம்புவீர்கள் என்ற நம்பிக்கையோடு முன்னுரையை முடிக்கிறேன்.
என்றும் அன்புடன்
பா.விஜய்
Release date
Ebook: 23 December 2019
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India