Fiction
தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக வடித்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கலைமாமணி லா.ச. ராமாமிருதம் அவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், “கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது. நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்” என்கிறார் ஆசிரியர்.
தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசா பாசங்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது? எந்தெந்தக் கோணங்களில் முன்னேறியிருக்கிறோம் - தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை’ எந்த அளவுக்கு பாதித்தன என்பதை எல்லாம் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் பாற்கடலில் நிறைந்திருக்கும் அமுதத் துளிகளைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்.
Release date
Ebook: 18 May 2020
Fiction
தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக வடித்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கலைமாமணி லா.ச. ராமாமிருதம் அவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், “கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது. நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்” என்கிறார் ஆசிரியர்.
தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசா பாசங்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது? எந்தெந்தக் கோணங்களில் முன்னேறியிருக்கிறோம் - தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை’ எந்த அளவுக்கு பாதித்தன என்பதை எல்லாம் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் பாற்கடலில் நிறைந்திருக்கும் அமுதத் துளிகளைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்.
Release date
Ebook: 18 May 2020
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India