ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஆனந்த தாண்டவம் என்ற உடனேயே எல்லோருக்குள்ளும் சிவபெருமானின் நாட்டிய உருவம் தான் ஞாபகத்திற்கு வரும். வேறு எதுவும் வராது என்பதும் ஒரு பேருண்மை. ஆனந்தம் ஏற்படப்போய் அவர் ஆடுகிற படியால் அப்படி ஒரு பெயரா இல்லை அதைப் பார்ப்பவர்க்கு ஆனந்தம் வரும் என்பதால் அப்படி ஒரு பெயரா என்று நாம் ஆனந்ததாண்டவம் குறித்து நிறையவே விவாதிக்கலாம்.அந்த தாண்டவம் விவாகத்துக்கு உரியது மட்டுமல்ல. பெரும் ஆராய்ச்சிக்கும் உரியது. அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்தபடியே இருக்கின்றன.
ஒரு ரகசியம் எழுத்தில் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அது தோற்றத்திலும் இருக்கலாம்.
இந்த சிந்தனைகளை எல்லாம் உள்ளடக்கியே இந்த தொடர் நாவலை எழுதினேன். வெகுஜன இதழ்களில் எழுதும்போது விறுவிறுப்புக்கு குந்தகம் வந்துவிடக்கூடாது என்று எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட விறுவிறுப்போடு என் ஆன்மிக எண்ணங்களையும் குழைத்தே இதை எழுதினேன். இப்படி நான் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. சிவமயம், சிவம், ருத்ரவீணை, கிருஷ்ணதந்திரம், எங்கே என் கண்ணன் என்று என் பல படைப்புகள் இந்த ரகமே!
என் வாசகர்கள் வழக்கம் போல இந்த தாண்டவத்தில் திளைப்பார்கள் என்று நம்புகிறேன்.
- இந்திரா செளந்தர்ராஜன்
วันเปิดตัว
อีบุ๊ก: 6 เมษายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย