நம்முடைய பண்பாடும் - நாகரிகமும் கலப்படம் அடையாமல் தூய்மையாக இருந்த காலம் அது. நாகரிகத்தினால் மாசுபடாதிருந்த மனங்கள். கணவன் - மனைவி - குழந்தைகள்- பெற்றோர் - குடும்ப வாழ்க்கை ஆகியவை பூச்சி அரிக்கப்படாமல் பொலிவோடு துலங்கிய காலத்தைத் தம் நாவலில் கையாண்டிருக்கிறார் ஆசிரியர் ரஸவாதி.
அந்தக் காலத்து திருச்சியிலும், அடுத்துள்ள துறையூரிலும் தொலைவிலிருந்த சென்னையிலும் தன் கதாபாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார். - உதவும் கரமாக விளங்கும் ஒரு வக்கீலும், ஊர் நன்மைக்காகப் பாடுபடும் ஒரு டாக்டரும், சலன புத்தியுடைய சென்னை சபா காரியதரிசியும், உற்ற தோழிகளாக பாகீரதியும் சுலோசனாவும் - ‘தன் பெண் இப்படி இருக்கிறாளே’ - என்று கவலைப்பட்டே மாய்ந்து போகும் அந்தக் காலத்து மனுஷியாக கதாநாயகியின் தாயும், மகளிடம் அசைக்க முடியாத நம்பிக்கையும் பாசமும் கொண்ட தந்தை சபேசையரும், உடன் பிறந்த தம்பி பாலுவும், தங்கை தங்கமும் ஒளிவீசும் கற்களாக இந்த நாவலில் உலவவிடப்பட்டிருக்கிறார்கள்.
ஆர்ப்பாட்டமான வார்த்தை ஜாலங்களோ, அதீதமான கற்பனைகளோ, வரம்பு மீறிய வர்ணனைகளோ இல்லாது. எதார்த்தமான சம்பவங்களைக் கொண்ட எளிமையான ஒரு நாவலை - குடும்பப்பாங்கான நாவலை, சம்பவங்கள் - எண்ணங்கள் - மனப் போராட்டங்கள் - சூழ்நிலைகளைக் கொண்டு தொய்வில்லாமல் பின்னி இருக்கிறார் நாவலாசிரியர்.
ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் ஒரு மத்தியதரக் குடும்பத்தின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆதார ஸ்ருதி அதற்கு வழிவகுக்கும். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் பாகீரதி, தன் கணவனின் நடத்தைக்கு ஒத்துப்போக முடியாமல், முரண்பட்டு வெளியேறி, துணிவோடு தனித்து நின்று, வாழ்க்கை வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டுக் கரையேறும் பாங்கு, உங்களை மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ரஸவாதியின் ரசமான இந்த நாவலை, ஸ்ருதி சுத்தமான இந்த ஆதார ஸ்ருதியை உங்களுக்கு அளிப்பதில் பெருமைப்படுகிறோம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา