ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
Fantasy
அவன் ஒரு அற்புதமான கலைஞன். அவனை யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட. அவனின் எழுத்துக்கள் அபூர்வமானவை. அளவானவை. அதை படித்திருந்தவர்கள் அளவானவர்கள். ஜனசமுத்திரத்தில் அவர்கள் அங்கொன்றும்இங்கொன்றுமாய் அடையாளமற்று அவனைப்போல கரைந்து போயிருப்பவர்கள்.
அவன் தன்னை இந்த ஜனத்திரள் முன் இந்த அதிகார வர்க்கத்தின் முன் இந்த அளவீடுகளின் முன் இந்த தீர்மானிக்கும் சக்தி மையங்களின் முன் எழுத்தாளனாக காட்டிக்கொள்ள விரும்பியதில்லை. ஆனாலும் அவன் ஒரு அப்பழுக்கற்ற அதிதீவிரமான எழுத்துக்களை படைத்தும், படைத்துக்கொண்டும் இருந்தான். தனிமையும், வறுமையும், விதைக்கப்பட்ட விரக்தியும் அவனின் இருப்பை அரித்தெடுத்து ருசித்துக்கொண்டிருந்தது. அவன் அவனின் படைப்புலகிற்குள் ஒதுங்கிப்போய் தனதான இருப்பை இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருப்பவனாய் இருக்கிறான்.
காலவிளையாட்டு அவனை சுழற்றியடிக்கிறது. அவன் காலத்தை சுழற்றிவிட தன் கனவுலகில் படைத்தெடுக்கும் படைப்புகளை ஆயுதமாக்குகிறான். காதலை துரத்துபவன் கண்ணுக்குத் தெரியாத உலகில் துரத்தப்படுவனாக இருந்திருக்கிறான் என்பது ஒரு நிசப்தமௌனப்புள்ளியில் செவி கடந்த குரலின் ஆத்மாவினால் பதிவு செய்யப்படுகிறது.
சதாத் உசேன் மாந்த்தோ எழுதிய சிறுகதை மூலமாக கொண்டு மிருணாள் சென் எழுதிய திரைக்கதையை அடியற்றி படைக்கப்பட்ட நாவல் இது. ஆந்த்தரீன் என்றால் ஒடுங்கிப் போன அல்லது ஒடுங்கிப் போன அல்லது ஒடுங்கிப் போக நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆத்மா என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். அப்படிப் பார்க்கையில் இது ஒடுங்கிப் போன ஒரு ஆத்மா அந்த ஆத்மாவிற்குள் அதைப்போல் உள்ள இன்னொரு ஆத்மா என அதன் வலிகளை துளித்துளியாய் தொட்டு கவிதையாக்கியிருக்கும் கதை இது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย