ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Details page - Device banner - 894x1036

Azhiyatha Kaadhalin Aalayam

ภาษา
ภาษาทมิฬ
Format
หมวดหมู่

โรแมนซ์

திரு/திருமதி சுந்தரம் தம்பதிகளை நான் சில காலமாகத்தான் அறிந்திருக்கிறேன். நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனால் நாங்கள் எதிர் எதிர் வீடுகளில் இருப்பது ஆச்சர்யம். தம்பதிகள் இருவரையும் நான் முதன் முதலில் சந்தித்ததே என் வீட்டில்தான் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். 4 ஆகஸ்ட் 2007ம் நாளன்று, கோட்டூர்புரத்திலுள்ள எங்கள் வீட்டில் "பாரதி 200" சந்திப்பிற்கு ஏற்பாடாகி இருந்தது. ஏற்பாடு செய்திருந்த திரு.என்.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் "பாரதி 200" கூட்டத்தை அவர் விரும்பியபடி நடத்துவது தான் சரி என்று நண்பர்கள் முடிவு செய்து பாரதியைப் படிக்க நாங்கள் தயாராக இருந்தோம். அப்போதுதான் சுந்தரம் தம்பதிகள், திரு பாலசுப்ரமணியன் அவர்களின் அழைப்பின் பேரில், ''பாரதி 200" கூட்டத்தில் கலந்து கொள்ள எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். மிகச்சில வினாடிகளுக்குள் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.

அந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து, திரு சுந்தரம் அவர்கள் உடனேயே அவர்கள் வீட்டில், எங்கள் நட்புவட்டம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். சுமார் 15 பேர் போயிருந்தோம். அபார உபசரிப்பு! மிகவும் நெருங்கிப் போனோம். அதன் பிறகு பத்மா மேடம் நவராத்ரி, கோகுலாஷ்டமி, என அனைத்து விழாக்களுக்கும் கூப்பிடுவார். அவர் மிகுந்த அக்கறையுடன் அலங்கரிக்கும் துர்காதேவியை காண்பதற்காகவே தவறாமல் போய் வருவேன். அந்த தம்பதிகளின் அந்யோன்யம், அறிவுப்பகிர்தல், அன்புப்பகிர்தல், நட்பு கொண்டாடுதல், நலம் விசாரித்தல், விருந்தோம்பல் என்று எத்தனையோ சிறப்புக்களை நான் வெகு குறுகிய காலத்திலேயே அனுபவித்துப் புரிந்துகொண்டேன். ஆனால் என்ன? திருமதி பத்மா சுந்தரம் மறைந்த தருணத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். சென்னை வந்த பிறகும் எனக்கு திரு. சுந்தரம் அவர்களைச் சந்திக்கத் தயக்கமாகவே இருந்தது அவருடைய நண்பர் திரு பாலசுப்பிரமணியன் அவர்களிடம் எப்போதும் வருத்தப்பட்டுச் சொல்வேன். “சுந்தரம் இந்த Formality- களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்” என்று சொல்லி நட்புடன் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறிவிட்டார்.

நான் என் மாலை நேர நடைப்பயிற்சியில் பெரும்பாலும் திரு.பாலசுப்ரமண்யத்தை சந்திப்பதுண்டு. அப்படி ஒருநாள் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவருடைய மேஜையில் சுந்தரம் அவர்கள் தொகுத்திருந்த “Elegies on Padma”வைப் பார்த்தேன். ஒரு சில பக்கங்களில் என் பார்வையை ஓட்டினேன். இப்படிக்கூட ஒரு மனைவிக்காக ஒரு கணவன் உருக முடியுமா? என்று பாலுசாரிடம் வியந்து கேட்டேன். இதனைப் படித்துவிட்டுத் தரட்டுமா- என்று கேட்டு எடுத்துக் கொண்டு போனேன். படித்துப் படித்து கண்ணீர் மல்கினேன். எழுத்தாளராகவே நான் என் வாழ்க்கையின் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ படித்திருக்கிறேன்... எத்தனையோ எழுதியிருக்கிறேன். அவை எதிலும் காணாத ஒரு ஆழ்ந்த உணர்வை, ஆழ்ந்த தாக்கத்தை இந்த கவிதாஞ்சலி எனக்குள் ஏற்படுத்தியது. இரவு பகலாக திரு.சுந்தரம் அவர்களின் சில வரிகள்.. வார்த்தைகள் எனக்குள் பிரயாணப்பட்டுக் கொண்டேயிருந்தது. நான் இப்போது திருமதி பத்மா சுந்தரம் அவர்களுடன் மிகவும் நெருங்கி விட்டது போல் உணருகிறேன். இப்படியொரு பெண்மணியா? அவர் இருந்த போது பழகாமல் போய் விட்டோமே என்று வருந்துகிறேன்.

இந்த என் மனநிலையில் நான் இருந்தபோது நான் சற்றும் எதிர்பாராத வகையில் திரு சுந்தரம் அவர்கள் போன் செய்து “Elegies on Padma”படித்தீர்களா? என்றார். படித்தேன் என்றேன். “அதைத் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா” என்றார். அவருடைய ஆங்கிலம் என்றுச் சற்று மிரட்டத்தான் செய்தது. “முயன்று பார்க்கிறேன்” என்றேன். “நான் சில பக்கங்களைச் சொல்கிறேன். முதலில் அதை தமிழில் எழுதுங்கள். உங்கள் எழுத்து என் உணர்வோடு ஒத்துப் போகிறதா என்று பார்க்கிறேன். பின் தொடரலாம்” என்றார். நான் அவர் குறிப்பிட்டுத் தந்த பக்கங்களை மட்டுமே மொழி பெயர்த்துக் கொடுத்தேன். தொடரச் சொன்னார்.

என்னால் இயன்றவரை மொழி பெயர்த்துள்ளேன். இதனை நேரடி மொழி பெயர்ப்பு என்று சொல்லிவிட முடியாது. உணர்வுக்கும் கருத்துக்கும் ஏற்றார்போல வார்த்தைகள் சேர்க்கப் பட்டுள்ளன. ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கையும் அதிகம். இதனை திருமதி பத்மா சுந்தரத்தின் பரிபூரண ஆசிகளோடுதான் என்னால் எழுத முடிந்திருக்கிறது. துர்காதேவியின் மடியில் இருந்துகொண்டு எனக்கு மனப்பூர்வமான ஆசிகளை வழங்கி அவரே என்னை எழுத வைத்திருக்கிறார்.

திரு. சுந்தரம் அவர்கள் அறியாத மிகச்சிறந்த எழுத்தாளர்கள் இல்லை. அப்படியிருக்க என்னைத் தேர்ந்தெடுத்து இந்த வாய்பினைக் கொடுத்தமைக்காக அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

วันที่วางจำหน่าย

อีบุ๊ก : 23 ธันวาคม 2562

คนอื่นก็สนุก...

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน
  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน
  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม