ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
'என் இனிய காதலியே' என்ற நாவல்.
பெரிய ஓட்டல் நடத்திச் செல்வச் செருக்கில் இருக்கும் ஜெயராமன் வீட்டைத் தேடி நந்து ஒருவரால் அறிமுகப்படுத்தப்படுகிறான். நந்து காலக்கிரமத்தில் செல்வம் தேய்ந்து வறுமை நிலைக்கு தள்ளப்படும் ஜெயராமனின் குடும்பத்தை யாரும் அறியாமல் நந்து தன் உத்தியோகத்தின் வருவாயிலிருந்து காப்பாற்றுகிறான். ஜெயராமனின் மகள் கங்காவை நந்துவுக்குத் திருமணம் செய்யும் எண்ணத்தில் பார்வதி முயல்கிறாள். கங்காவுக்கு நந்துவைக் கண்டாலே பிடிக்காது, வெறுத்து ஒதுக்குகிறாள். கங்கா வேலைக்குப் போகிறாள். அவள் அலுவலக ஜி.எம் முடன் உறவாடுகிறாள். நந்துவைத் திருமணம் செய்து கொள் என்று சொன்ன பார்வதிக்கும் ஜெயராமனுக்கும் தெரியாமல் எங்கோ கோயிலில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் நடந்து விட்டதாகத் தாயிடம் கூற ஜெயராமனும், பார்வதியும் அதற்கு இசையாமல் கோபப்பட்டு அவளை வெளியேற்றுவதும், இறுதியில் கங்கா வறுமை நிலைக்கு தள்ளப்படுவதும் பார்வதி மரணப்படுக்கையில் கிடப்பதும் நந்து கங்காவைத் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வருவதும் ஜெயராமனின் வெறுப்புணர்வும், இறுதியில் கங்காவின் கழுத்தில் நந்து தாலிக் கயிறு கட்டுவதும் நாவல் படிப்பவர்களின் நெஞ்சைப் பிழிந்து விடும்.
உங்கள் கைகளில் நாவல் வந்து விட்டது. நாங்கள் கதை சொல்வதை விட நீங்களே படித்துச் சுவைத்து அனுபவிக்க விட்டு விடுகிறோம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 6 เมษายน 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย