ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டாலும் சரி, பூவுலகில் பெரியோர்களாலும் இஷ்ட மித்ர பந்துக்களால் தீர்மானிக்கப்பட்டாலும் சரி, அல்லது காதல் திருமணமாக கடிமணம் புரிந்தாலும் சரி, திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்பது எப்படி அமையும் என்பது தீர்மானிக்க முடியாமல் தான் இருக்கிறது.
பெண் என்பவள் நாற்றங்கால் போல என்கிறார்கள். ஓரிடத்தில் வளர்க்கப்பட்டு இன்னொரு இடத்தில் ஊன்றப்படும் உயிர் ஜீவன் அவள். பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இருவேறுபட்ட வாழ்க்கையையும்எதிர் கொண்டுதன் ஆற்றலால் ஒன்றாக்க முனையும் பிறவி அவள். ஒத்துப் போதல், விட்டுக் கொடுத்தல், அன்பு, அனுசரிப்பு என்று அடுக்கப்படும் உபதேசங்கள் அவளை நோக்கியே நீளும் மந்திர உச்சாடனங்கள். எது எப்படியிருப்பினும் திருமண பந்தத்தின் நோக்கம் இன்னொரு குடும்ப நீட்சிக்கான ஆயத்தமே என்று பார்க்கும் பொழுது அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பெண்கள் கையில்தான் பத்திரமாக இந்த சமூக அமைப்பில் ஒப்படைக்கப் பட்டிருப்பது புரியும்.
இந்தக் கதையின் நாயகி கமலிக்கு ஏற்பட்ட திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை அனுபவங்களோ வேறு மாதிரியானவை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள், தன் ஆற்றலால் ஏற்படும் பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறாள் என்பவை தான் இந்த நாவலாக ரூபம் கொண்டிருக்கிறது...
வித்தியாசமான இந்தப் புதினத்தைவாசித்துத் தான் பாருங்களேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย