4
ประวัติศาสตร์
சரித்திர நாவல்கள் படிப்பதில் தமிழ் வாசகர்களுக்கு என்றுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. தமிழ் மண்ணின் பழங்கால வரலாறுகளை - முடிசூடி நாடாண்ட மூவேந்தர் பரம்பரையின் ஆட்சிச் சிறப்பை - பண்பாடு மாட்சிச் சிறப்பை - வீரத்தின் வெளிப்பாடுகளை அக்கதைகள் விரித்துரைக்கின்றன என்பதால், அவற்றைப் படித்து மகிழ்வதில் ஒரு தனி இன்பமும் பெருமிதமும் ஏற்படுகிறது. சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் - சாளுக்கியர் படையெடுப்பு, ஹொய்சாளர் படையெடுப்பு, பிற்கால நாயக்கர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, முகமதியர் கால பாதிப்புகள், தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி என்று இரண்டாயிரம் ஆண்டுக்கால சரித்திரம் எத்தனையோ செய்திகளை ஏந்திக் கிடக்கிறது. அவற்றை அடித்தளமாகக் கொண்டு எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
“கடந்த காலத்தின் காலடிச் சுவடுகள், நிகழ்காலத்துக்கான நடைபாதை. சம்பவங்களைச் சரித்திரங்களாய் மதிப்பிட்டு விடுவதும், சரித்திரங்களைச் சம்பவங்களாய் விலக்கி விடுவதும், பெரும்பாலான கல்வியாளர்களின் பலவீனம். ஆனால்... காலத்தின் கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம்” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அது உண்மைதான்.
சரித்திரக் கதைகள் என்னும் தளம் மிக விரிவானது; ஆழமானது; சுயாரஸ்யமானதும் கூட.
அமரர் கல்கி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இத்துறையில், அவரை அடியொற்றிப் பல எழுத்தாளர்கள் சரித்திரக் கதைகள் எழுதிப் புகழடைந்திருக்கிறார்கள். சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், விக்கிரமன், மீ.ப.சோமு, கலைஞர் மு.கருணாநிதி என்று தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளப் பெருமக்கள் பலர் உண்டு. அந்த வரிசையில், இளந்தலைமுறை எழுத்தாளர்களில் கௌதமநீலாம்பரன் குறிப்பிடத்தக்கவராகத் நிகழ்கிறார். இவருடைய சரித்திர நவீனங்கள் வாசகர்களிடம் மகத்தான வரவேற்பைப் பெறுகின்றன.
இப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடராக வரலாற்றுக் கதைகள் அவ்வளவாக வருவதில்லை என்ற குறை இருக்கிறது. அக்குறையை இதுபோல் பதிப்பகங்கள் வெளியிடும் தனி நூல்கள்தான் போக்கி வருகின்றன.
கௌதமநீலாம்பரன் எழுதிய சரித்திர நவீனங்கள் அனைத்தையும் தொகுதி நூல்களாக வெளியிடும் முயற்சியில் செண்பகா பதிப்பகம் ஈடுபட்டுள்ளது. இதோ அவர் எழுதிய முத்தான மூன்று வரலாற்றுக் கதைகள் உள்ள முதல் தொகுதி உங்கள் கரங்களில்.
வாங்கி, வாசித்து மகிழுங்கள். உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் வரலாற்றின் புகழ்!!
- ஆர்.எஸ். சண்முகம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
4
ประวัติศาสตร์
சரித்திர நாவல்கள் படிப்பதில் தமிழ் வாசகர்களுக்கு என்றுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. தமிழ் மண்ணின் பழங்கால வரலாறுகளை - முடிசூடி நாடாண்ட மூவேந்தர் பரம்பரையின் ஆட்சிச் சிறப்பை - பண்பாடு மாட்சிச் சிறப்பை - வீரத்தின் வெளிப்பாடுகளை அக்கதைகள் விரித்துரைக்கின்றன என்பதால், அவற்றைப் படித்து மகிழ்வதில் ஒரு தனி இன்பமும் பெருமிதமும் ஏற்படுகிறது. சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் - சாளுக்கியர் படையெடுப்பு, ஹொய்சாளர் படையெடுப்பு, பிற்கால நாயக்கர் ஆட்சி, ஐரோப்பியர் வருகை, முகமதியர் கால பாதிப்புகள், தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி என்று இரண்டாயிரம் ஆண்டுக்கால சரித்திரம் எத்தனையோ செய்திகளை ஏந்திக் கிடக்கிறது. அவற்றை அடித்தளமாகக் கொண்டு எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
“கடந்த காலத்தின் காலடிச் சுவடுகள், நிகழ்காலத்துக்கான நடைபாதை. சம்பவங்களைச் சரித்திரங்களாய் மதிப்பிட்டு விடுவதும், சரித்திரங்களைச் சம்பவங்களாய் விலக்கி விடுவதும், பெரும்பாலான கல்வியாளர்களின் பலவீனம். ஆனால்... காலத்தின் கணக்கில், வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம்” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அது உண்மைதான்.
சரித்திரக் கதைகள் என்னும் தளம் மிக விரிவானது; ஆழமானது; சுயாரஸ்யமானதும் கூட.
அமரர் கல்கி அவர்களால் பிரபலப்படுத்தப்பட்ட இத்துறையில், அவரை அடியொற்றிப் பல எழுத்தாளர்கள் சரித்திரக் கதைகள் எழுதிப் புகழடைந்திருக்கிறார்கள். சாண்டில்யன், அகிலன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், கோவி.மணிசேகரன், விக்கிரமன், மீ.ப.சோமு, கலைஞர் மு.கருணாநிதி என்று தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்தாளப் பெருமக்கள் பலர் உண்டு. அந்த வரிசையில், இளந்தலைமுறை எழுத்தாளர்களில் கௌதமநீலாம்பரன் குறிப்பிடத்தக்கவராகத் நிகழ்கிறார். இவருடைய சரித்திர நவீனங்கள் வாசகர்களிடம் மகத்தான வரவேற்பைப் பெறுகின்றன.
இப்போதெல்லாம் பத்திரிகைகளில் தொடராக வரலாற்றுக் கதைகள் அவ்வளவாக வருவதில்லை என்ற குறை இருக்கிறது. அக்குறையை இதுபோல் பதிப்பகங்கள் வெளியிடும் தனி நூல்கள்தான் போக்கி வருகின்றன.
கௌதமநீலாம்பரன் எழுதிய சரித்திர நவீனங்கள் அனைத்தையும் தொகுதி நூல்களாக வெளியிடும் முயற்சியில் செண்பகா பதிப்பகம் ஈடுபட்டுள்ளது. இதோ அவர் எழுதிய முத்தான மூன்று வரலாற்றுக் கதைகள் உள்ள முதல் தொகுதி உங்கள் கரங்களில்.
வாங்கி, வாசித்து மகிழுங்கள். உங்கள் மேலான கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் வரலாற்றின் புகழ்!!
- ஆர்.எஸ். சண்முகம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 1
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย