ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
நம் தமிழ் மொழியில் நிறைய பாட்டி கதைகள், கிராமியக் கதைகள், வாய்மொழிக் கதைகள் உள்ளன. அதேபோல் வெளிமாநிலங்களான ராஜஸ்தான், பாலஸ்தீனம், பீகார், புத்தேல்கண்ட், நேபால் முதலிய இடங்களில் அம்மக்களால் வாய்மொழியாகக் கூறப்பட்டு வந்த கதைகளை மொழி பெயர்த்துத் தந்திருப்பது சிறப்பானது. இதன் மூலம் அந்த மாநிலங்களில் வாழும் மக்களின் சமுதாய வாழ்க்கையையும், அறநெறிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, நகைச்சுவை ஊட்டி, மனதை மகிழ்விக்கும் கதைகளும் படித்து இன்புறத்தக்கவை.
உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்லும் ஜுன்ஜுனா, கிளி, மைனா கதை போன்றவையும், ஒன்றுக்கு இரண்டு, முட்டை கதை, சேட் கதை போன்றவை நகைச்சுவையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கவை. நான்கு திருடர்கள், இரண்டு ஏமாற்றுக்காரர்கள், எமனின் முடிவு போன்ற அறநெறிக் கதையும் மிகவும் சிறப்பாக உள்ளன. இப்படி இதில் உள்ள கதைகளைக் கூறிக்கொண்டே போகலாம். இவை பல நீதிகளை விளக்குகின்றன. இவைகளை வடமொழியில் ‘ஜாதக்’ கதைகள் என்பர். இவைகளிலிருந்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாடு பற்றியும் நீதியை உணர்ந்தவர்கள் யாரும் பின் தங்கியவர்கள் இல்லை என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் நமது பொக்கிஷங்கள். வேற்று மொழியில் இருந்து நம் மொழியில் மொழிபெயர்க்க நடுநிலையாக நாம் ஒரு மொழியைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பணியை நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார். இதில் உள்ள கதைகள் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. இதை பெரியவர் மட்டுமல்ல குழந்தைகளும் படித்து இன்புற வேண்டும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย