ศาสนา&จิตวิญญาณ
"பக்தி மணம் இல்லாத இசை இயற்கையான மணம் இல்லாத மலரைப் போன்றது!" என்று கூறினார் மூதறிஞர் ராஜாஜி. பக்தியைப் பரப்ப பல வழிகள் இருந்தும், இசையை முக்கியமான துணையாக மேற்கொண்டு, இறைவன் அருளை நாடிப் புறப்பட்டார்கள். பாரத நாட்டில் வாழ்ந்த பக்த சிரோன்மணிகள் பலர். தன்னை மறந்து பஜனையின் பேரின்பத்தில் திளைத்த ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு முதல், எளிமையாகக் காவேரிக்கரையில் அமர்ந்து கீர்த்தனைகள் பாடிய தியாகராஜ சுவாமிகள் வரை, அந்தப் பக்தர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் கிடைத்தது. அரச குலத்தில் பிறந்த மீராபாயிலிருந்து, மண்பாண்டம் செய்து விற்ற கோராகும்பர் வரையில், பக்தியில் திளைத்த பலரும் பரமனின் லீலைகளுக்கு ஆளாகிப் பெரும் பேறு பெற்றார்கள்.
நாட்டில் இன்று மொழி என்பது மக்களைப் பிரித்து வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தப் பக்தர்கள் பக்திமணம் கமழும் இசையின் மூலம் நாட்டு மக்களை இணைத்தார்கள். மீராபாயின் இந்தி பஜனை கீதங்களும், ஜயதேவரின் சம்ஸ்கிருதப் பாடல்களும், ஆண்டாளின் தீந்தமிழ்த் திருப்பாவையும், புரந்தரதாசரின் கன்னடக் கிருதிகளும், மொழியின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் ஈர்த்து ஒன்றுபடுத்தின.
மகாராஷ்டிர மொழியில் இராமாயணம் பாடினார் ஏகநாதர். இந்தி மொழியில் இராமாயணத்தைப் பாடல்களாக இயற்றினார் துளசிதாசர். பட்டாத்ரி பாகவதத்தைச் சமஸ்கிருதத்தில் பாடினார். பூந்தானம் அதையே மலையாள மொழியில் பாடினார். சிவபிரானின் பக்தராக இருந்து ராதாகிருஷ்ண தத்துவத்தைப் பஜனைப் பாடல்களில் பாடிச் சைவ வைணவச் சமய ஒற்றுமைக்கு வழி வகுத்தார் மகான் வித்யாபதி. இறைவனின் அருள் பெருகும்போது பிரிவினைகளுக்கு இடம் ஏது?
குழந்தை நாமதேவனுக்காக நைவேத்யத்தை உண்ண வந்தான் வாசுதேவன். கண்ணனையே கைக்குழந்தையாக எடுத்துப்பாடி மகிழ்ந்தாள் கருமபாய். இறைவன் நண்பனாகவும், சேவகனாகவும், காவலனாகவும், காதலனாகவும் வந்து பக்தர்களுக்குக் கைகொடுத்த கதைகள் அநேகம்.
புண்ணிய பாரத பூமியில் பக்தி இசை மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் பாடுபட்ட பக்தர்களின் பாத மலர்களுக்கு இந்த எளிய நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் அவர்களுடைய நல்லாசி இந்த நாட்டின் பெருமையைக் காப்பாற்றட்டும்.
- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 ธันวาคม 2562
ศาสนา&จิตวิญญาณ
"பக்தி மணம் இல்லாத இசை இயற்கையான மணம் இல்லாத மலரைப் போன்றது!" என்று கூறினார் மூதறிஞர் ராஜாஜி. பக்தியைப் பரப்ப பல வழிகள் இருந்தும், இசையை முக்கியமான துணையாக மேற்கொண்டு, இறைவன் அருளை நாடிப் புறப்பட்டார்கள். பாரத நாட்டில் வாழ்ந்த பக்த சிரோன்மணிகள் பலர். தன்னை மறந்து பஜனையின் பேரின்பத்தில் திளைத்த ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு முதல், எளிமையாகக் காவேரிக்கரையில் அமர்ந்து கீர்த்தனைகள் பாடிய தியாகராஜ சுவாமிகள் வரை, அந்தப் பக்தர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் கிடைத்தது. அரச குலத்தில் பிறந்த மீராபாயிலிருந்து, மண்பாண்டம் செய்து விற்ற கோராகும்பர் வரையில், பக்தியில் திளைத்த பலரும் பரமனின் லீலைகளுக்கு ஆளாகிப் பெரும் பேறு பெற்றார்கள்.
நாட்டில் இன்று மொழி என்பது மக்களைப் பிரித்து வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தப் பக்தர்கள் பக்திமணம் கமழும் இசையின் மூலம் நாட்டு மக்களை இணைத்தார்கள். மீராபாயின் இந்தி பஜனை கீதங்களும், ஜயதேவரின் சம்ஸ்கிருதப் பாடல்களும், ஆண்டாளின் தீந்தமிழ்த் திருப்பாவையும், புரந்தரதாசரின் கன்னடக் கிருதிகளும், மொழியின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் ஈர்த்து ஒன்றுபடுத்தின.
மகாராஷ்டிர மொழியில் இராமாயணம் பாடினார் ஏகநாதர். இந்தி மொழியில் இராமாயணத்தைப் பாடல்களாக இயற்றினார் துளசிதாசர். பட்டாத்ரி பாகவதத்தைச் சமஸ்கிருதத்தில் பாடினார். பூந்தானம் அதையே மலையாள மொழியில் பாடினார். சிவபிரானின் பக்தராக இருந்து ராதாகிருஷ்ண தத்துவத்தைப் பஜனைப் பாடல்களில் பாடிச் சைவ வைணவச் சமய ஒற்றுமைக்கு வழி வகுத்தார் மகான் வித்யாபதி. இறைவனின் அருள் பெருகும்போது பிரிவினைகளுக்கு இடம் ஏது?
குழந்தை நாமதேவனுக்காக நைவேத்யத்தை உண்ண வந்தான் வாசுதேவன். கண்ணனையே கைக்குழந்தையாக எடுத்துப்பாடி மகிழ்ந்தாள் கருமபாய். இறைவன் நண்பனாகவும், சேவகனாகவும், காவலனாகவும், காதலனாகவும் வந்து பக்தர்களுக்குக் கைகொடுத்த கதைகள் அநேகம்.
புண்ணிய பாரத பூமியில் பக்தி இசை மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் பாடுபட்ட பக்தர்களின் பாத மலர்களுக்கு இந்த எளிய நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் அவர்களுடைய நல்லாசி இந்த நாட்டின் பெருமையைக் காப்பாற்றட்டும்.
- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 ธันวาคม 2562
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย