ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
พัฒนาตนเอง
“நெய்வேலிக் கூட்டம் ஒன்றில் நான் சொல்லியதைக் கூட்டத்தினரைத் திருப்பிச் சொல்லச் சொன்னபோது ஒரே ஒரு மாணவி மட்டும், அவள் எழுதியிருந்த நோட்டுப் புத்தகத்தில் அவள் எழுதி வைத்து இருந்ததை வாசித்துக் காட்டினாள். அதற்காக நான் அவளைப் பாராட்டி விட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிற இந்தக் கூட்டத்தில், நான் சொன்னவற்றை அவளால் அப்படியே திருப்பிச் சொல்ல முடிந்ததற்குக் காரணம், அவள் நான் சொன்னதையெல்லாம் உடனுக்குடன் அப்படியே எழுதிக் கொண்டதுதான்.
எழுதிக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் நான் சொல்லவில்லை. அதனால் பலரும் எழுதிக் கொள்ளவில்லை. அதேபோல நான் யாரும் எழுதிக் கொள்ளக்கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால் அந்த மாணவி ஒருவருக்குத்தான் எழுதிக் கொள்ளத் தோன்றியிருக்கிறது. அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய கூட்டத்தில் தனித்து உயரமாகத் தெரிகிறார். பாராட்டும் பெறுகிறார் என்றேன். அந்த மாணவி செய்தது – சொல்லாததை.
அதனால் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில், ஒருவர் முனைந்துதான் முன்னேற வேண்டும். அதற்கு ஒருவர் வெற்றிபெறத் தேவைப்படும் குணங்கள் என்று வெளிப்படையாகத் தெரியும் பலவற்றையும் விடக் கூடுதலாக நிறையச் செய்ய வேண்டியிருக்கும். அப்படிக் கூடுதலாகச் செய்யத் தெரிந்து வைத்திருப்பவர்கள், செய்பவர்கள் வாழ்வில் முந்துகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள்.
ஆக, அப்படித் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை, உணர்ந்து கொள்ள வேண்டியவற்றை எல்லாம் இனிச் சொல்லாததையும் செய் என்ற பொதுத் தலைப்பிலேயே எழுதலாம் என்று எண்ணினேன். அந்த வரிசையில் முதல் புத்தகம்தான் இவ்வளவுதானா நீ...
பொருளாதார சுணக்கம் போய்விட்டது. வளர்ச்சி தொடங்க இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த வளர்ச்சி தொடரக் கூடும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் மெய்ப்பட வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற இந்தப் புத்தகம் பலருக்கும் ஊக்கம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதியிருக்கிறேன்.
வாழ்த்துகள்.
சோம வள்ளியப்பன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กันยายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย