ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள், அவன், காரணமில்லாக் காரியங்கள் என்னும் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி இந்நூல்.
மூன்று குறுநாவல்களும் மூன்று வித பிரச்சினைகளைக் கொண்டு பின்னப்பட்டு - சிக்கல் இல்லாமல் சீரான நடையில் செல்பவை என்பதில் ஆச்சரியமில்லை.
முதல் கதையில் சிவா- பாரு என்னும் தம்பதிகள் - மனைவி வேலைக்குச் செல்வதால் அவளுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினை கனள மிகவும் நுணுக்கமாக, நாமே கண்ணால் கண்டு பிரமிப்பது போல் உருக்கமாக உருவாக்கப்பட்டு உள்ளது.
அவள்... அடுத்த குறுநாவல்,
சூழ்நிலைகளே ஒவ்வொரு மனிதனையும் சமூகக் கைதியாக கட்டிப்போடுகிறது. அத்தளையை உடைத்தெறிந்து வீறுகொண்டு நடந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இக்கதையில் வரும் நாயகி சண்பகம் மூலம் உணர்த்தியுள்ள விதம் அற்புதம்.
காரணமில்லாக் காரியங்கள்..
கதையின் நாயகி விசாலி… மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவைகளோடு சொல்லும் கதை, மூன்று கதையிலும் நாயகியரை மையமாக வைத்துக் கதை செல்லும்விதம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
இன்றும் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற நாயகிகள் நம் வாழ்க்கைப் பாதையில் உலா வெருவதைக் காணலாம்.
சொல் சிக்கனம், ஆழ்ந்த அனுபவ முத்திரைப் பதித்த எழுத்து வீச்சை இந்நாவல் முழுதும் காணலாம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย