ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3
கோட்டைப்புரத்து வீடு, மர்மதேசம், அசுர ஜாதகம் என பல வித்தியாசமான நாவல்களின் மூலம் வாசகர்களின் மனத்தில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். எழுத்தாளர்கள் முதலில் சிறுகதை எழுத ஆரம்பித்து பின்குறுநாவல், நாவல் என எழுத்தில் முன்னேறுகிறார்கள். சில சமயங்களில் எழுத்தாளர்களும் தங்களைப் பாதித்த சம்பவங்களை சிறுகதையாக எழுதி முடித்த பின்பே மனம் நிம்மதியடைவர். அப்படி பல சமயங்களில் பல பிரபல பத்திரிகைகளில் இந்திரா சொந்தர்ராஜன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதைத் தொகுதியாக வாசகர்களுக்கு இச்சிறுகதை விருந்தளிக்கிறது.
கதைகளில்தான் எத்தனை விதமான குணச்சித்திரங்கள், எத்தனை விதமான கதைக்களங்கள். நாவல்கள் முழு விருந்து என்றால் சிறுகதைகள், இனிப்பு காரம் காபி போன்ற சிற்றுண்டி விருந்து. சிற்றுண்டி விருந்து எல்லோருக்கும் பிடிக்கும். கலைக்க முடியாத ஒப்பனையில் உள்ள தொகுதியில் சிறுகதைகளும் வாசகர்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย