ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
โรแมนซ์
தொலைக்காட்சியின் வருகைக்குப் பிறகு மேடை நாடகங்கள் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. மேடை நாடக நடிகர்கள் ஒரு நாடகத்தை மேடையில் அரங்கேற்ற படும் கஷ்டங்கள் வலிகள் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.
பொதுவாக நாடக நடிகைகள் என்றால் அவள்மீது தவறான முத்திரை விழுந்து விடும் இந்த காலகட்டத்தில் சேற்றில் முளைத்த செந்தாமரை போல நாவலின் கதாநாயகி தன்னோடு நடிக்கும் ஒரு நடிகரை மனதார விரும்புகிறாள்.
சமூகம் அவர்களை வசை பாடியதா... இருவரையும் இணைத்து வைத்ததா என்பதை சொல்லும் அழகான நாவல் இது.
பெற்றோர் சம்மதிக்க மறுப்பு காட்டியபோது அவளைக் கரம் பிடிப்பதே முதல் வேலை என்று உறுதி கொண்ட கதாநாயகன் சென்னைக்கு வேலை தேடிச் சென்று வேலை வாங்கி அவளை திருமணம் செய்ய ஊர் வருகிறான்.
வந்த இடத்தில் அவள் காணாமல் போகிறாள். அவளைக் கண்டுபிடித்து கரம் பிடித்தானா இல்லையா என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லப்படும் நாவல்தான்.
கவிதை அரங்கேறும் நேரம். சுகமான காதல் காவியம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 1 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย