கதை சொல்லும் கலையில் கை தேர்ந்தவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவருடைய ஆங்கில நாவல்களில் சம்பவங்களும், கேரக்டர்களும், விறுவிறுப்பும், கொள்ளையாக இருக்கும். பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் இவர். துரதிருஷ்டவசமாக ஒரு கிரிமினல் குற்றத்தில் சிக்கி, தற்சமயம் பிரிட்டிஷ் சிறையில் இருக்கிறார். Shall We Tell the President என்ற இந்த நாவல் அவருடைய சிறந்த படைப்புக்களில் ஒன்று. அமெரிக்காவில் இதுவரை எந்தப் பெண்ணும் ஜனாதிபதியாக வந்ததில்லை. அப்படி ஒருவர் வந்ததாகவும், பயங்கரவாதிகள் அவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் கற்பனை செய்து இந்தக் கதையைப் பின்னியிருக்கிறார்.
1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் ஒரு 'மேடம்' இருந்தபோது இந்தக் கதை தொடராக வந்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்தக் கதை புத்தக வடிவம் பெறுவது மேலும் பொருத்தமே.
- ரா. கி. ரங்கராஜன்
วันเปิดตัว
อีบุ๊ก: 18 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา