உஷா அழகி. பண்பு மிக்கவள். படித்தவள். வக்கீல் தொழிலில் கை நிறைய சம்பளம் வாங்குபவள். ஆனால் இயற்கை அவளுக்குச் சதி செய்துவிட்டது. வசந்தம் மலரவில்லை. அவளுடைய வெளி அழகைக் கண்டு அல்ல, உள்ளத்தின் இனிமையைக் கண்டு ரமேஷ் காதலிக்கிறான்.
ஆனால் அவனிடம் தன் நிலையை எப்படிச் சொல்வாள்? மகளுக்குத் துணையைத் தர விரும்பிய அப்பா ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடிக்கிறார்.
மூன்று குழந்தைகளுக்குத் தந்தை. ‘குழந்தைகள் வேண்டாம். தோழமை போதும்’ என்று சொல்வதாக நினைத்து ஏமாந்துவிடுகிறார் அப்பா. அவளின் முழு உண்மையைத் தெரிவிக்காமல் மறைத்துச் சங்கருக்கு மணம் முடித்துவிடுகிறார்.
எவ்வளவு உயரத்தில் - சுதந்திரமாக - வட்டமிட்ட உஷா, ‘மணம்’ என்ற பந்தத்தால் அடிமையாகிவிட்டாள்! சங்கரிடம் - அவள் உடலுறவுக்கு உதவாதவள் என்று அறிந்து வெறிகொண்ட சங்கரிடம் - அவள் படும் பாடு... சிந்திக்க வைக்கும் நவீனம்... இனிய உயிருள்ள நடை. ஒரு புதுமுறைப் படைப்பு.
วันเปิดตัว
อีบุ๊ก: 22 พฤศจิกายน 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา