ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில் ஏட்டை அவருக்குப்பின் திண்டிவனத்திலிருந்து கவிஞர். கே.எம்.ஏ.வகாப் அவர்கள் நடத்தினார். அந்த ஏட்டில் கொடுக்கப்பட்ட வெண்பா ஈற்றடி "இயற்கை தமிழர்க் கிறை" அந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாதான் (1969) அச்சில் வந்த என் முதல் கவிதையாகும். அந்தந்தக் காலக்கட்டங்களில் நிலவிய சூழ்நிலைகளுக்கேற்பப் பல்வேறு ஏடுகள் கொடுத்த ஈற்றடிகளுக்கு எழுதப்பட்டு வெளி வந்த வெண்பாக்களின் தொகுப்பே இந்தநூல். 1969 முதல் 1998 வரையிலான காலங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் பதிவுகளாக இந்த வெண்பாக்கள் திகழ்கின்றன.
இந்த நூலுக்கு வாழ்த்துரை நல்கிய பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. அரங்க. தெய்வமணி அவர்களுக்கும்,அணிந்துரை வழங்கிய தமிழ்ச்சான்றோர் பேரவைத்தலைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கும், கவிக் கொண்டல் ஏட்டின் ஆசிரியர் கவிஞர் மா. செங்குட்டுவன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன், கருமலைத்தமிழாழன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 4 มิถุนายน 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย