ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
எழுதிய காதல் கவிதைகளை சிதறவிடாமல் மொத்தமாகத் தொகுக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவே உங்கள் முன் இப்புத்தகம்.
காதலுணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும். காதலை கவிதையாக்குகின்றவன் கவிஞனாகிறான். காதலை காதலிக்கின்றவன் காதலனாகிறான். காதலித்தால் கவிதை வருமா? காதலியை நேசமாக, ரசிக்கின்றவனாக, கவிதையாகப் பார்க்கின்றவனுக்கு வரும்; பெண்மையை மதிக்கின்றவனுக்கு வரும்.
பெண் மீது நாம் கொள்கின்ற அவ்வளவு அன்பை, பாசத்தை காதலுக்குள் திணித்து வைத்துள்ளோம். காதலை வெளிப்படுத்த, விரிவுபடுத்த, அவளோடு வாழ; பிப்ரவரி 14, அவள் பிறந்த தேதி, சந்திப்பு, நகைச்சுவை, வீரம், கவிதை வேண்டும். கவிதை சிறு அங்கமாகத் தேவைப்படுகிறது. காதலுக்குக் கவிதை நெருங்கிய தொடர்பில் இருக்கிறது.
உலக இலக்கியங்கள் காதலை குறிப்பிட்ட அளவிலேனும் சேர்க்காமல் இருப்பதில்லை. அவசரம், பரபரப்பு மிக்க வாழ்க்கையில் காதலுக்காக சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டியுள்ளது. பெரும் அறிவுஜீவிகள், அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், போராளிகள் காதலுக்காகச் சிந்திய கண்ணீர் அதிகம். காதலில் அப்படியென்ன இருக்கிறது என்றால் எதிலும் நீங்கள் கண்டிராத்து இருக்கிறது. ஆனால் அவ்வளவு சீக்கிரம் காண முடியாது.
பலர் காதலை பட்டிமன்றம் நடத்தினாலும் இங்கே எத்தனை காதலர்கள் ஜெயிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காதலில் வெற்றி எப்படி அங்கீகரிக்கப்படுகிறதோ அதே போல் தோல்வியும் புனிதப்படுத்தும். இது அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை காதலர்கள் பிரிவிற்கு அவர்களே காரணமாக இருக்கக் கூடாது.
காதலுக்காக நடக்கின்ற கொடூரங்கள் செய்தித்தாள்களில் படிக்க முடிகிறது. நேர்மையான காதலர்கள் பிரியும்போது உள்ளம் ஆதங்கப்படுகிறது. மதத்தை, சாதியை, இனத்தை மீறி காதல் திருமணம் செய்வதால் மனிதர்களுக்குள் நிலவும் வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை மேலோங்க வழி பிறக்கும்.
கண்களில் ஊடுருவி, தெய்வத்தன்மை பொருந்தி, இதயங்கள் பேசும் இந்தக் காதலால் மனித உயிர்கள் ஜீவிக்கின்றன. காதலைப் பேசிக் கொண்டேயிருக்கலாம். தீராது, தொய்வு தராது.
காதலுடன், நலங்கிள்ளி
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 23 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย