ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.5
พัฒนาตนเอง
சைக்கிள் கடை வைத்து, பிழைப்பு நடத்தும் முருகன். தன் குல தெய்வ கோவிலின் கட்டிட நிதிக்காக உண்டியலில் பணம் சேர்க்கிறான். பணத் தட்டுப்பாட்டில் சிரமப்படும் போதெல்லாம், அதிலிருந்து எடுத்து செலவு செய்யலாம், என்கிறாள் அவன் மனைவி. ஆனால், எக்காரணத்தைக் கொண்டு சாமி காசை எடுக்கக் கூடாது, என்று பிடிவாதமாயிருக்கிறான் முருகன். குழந்தையின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப் பட்ட போதும், தன் உறுதியில் கான்கிரீட்டாய் நிற்கிறான்.
ஒரு நாள், அவன் வீட்டு முன்னால் யாரோவொரு கிழவி, பசியால் மயங்கி விழ, அவளுக்கு உணவளிக்க நினைக்கிறான். ஏற்கனவே வறுமை வாட்டிக் கொண்டிருந்ததால் அவன் வீட்டில் எதுவும் இல்லாது போகிறது. மற்ற வீடுகளில் முயற்சித்தும் கிடைக்காது போக, அந்த சாமி உண்டியலை உடைக்கிறான். அந்தக் கிழவிக்கு உணவளிக்கிறான். அவள் தன் பிள்ளையால் ஒதுக்கப்பட்ட கதையைச் சொல்ல, அவளைத் தன் வீட்டிலேயே வைத்துப் பாதுகாக்கிறான்.
சில மாதங்களுக்குப் பிறகு, கிழவியின் மகன் வந்து அவளைத் தன்னுடன் அனுப்பி விடுமாறு கேட்கிறான். கிழவி போக மாட்டாள், என்கிற நம்பிக்கையில், “அம்மா வந்தால் கூட்டிட்டுப் போ”என்கிறான் முருகன். ஆனால், அவன் நம்பிக்கையை பொய்யாக்கி விட்டு, கிழவி மகனுடன் புறப்பட்டுச் செல்கிறாள்.
ஆடிப் போகின்றனர் முருகன் குடும்பத்தார். தொடர்ந்து வ்ரும் நிகழ்வுகளைப் படிக்கும் எல்லா வாசக்ர்களும் நிச்சயம் மெய் சிலிர்த்துப் போவர். நீங்களும் வாசியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย