ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தாலாட்டு மாறிப்போனதோ நாவல் நெகிழ்வான படைப்பு நடுத்தர வர்க்கத்து ஒரு தாயின் தவிப்பே நாவல் தன் பிள்ளைகளை சரிசமமாக வளர்த்து ஆளாக்க வேண்டும் தன் பெண்ணை நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டு ஆண் பிள்ளையை குடும்ப சுமையை சுமக்க வைக்கும் பூங்கோதை என்ற ஒரு நடுத்தர வர்க்கத்து தாய் அவளுடைய தவிப்பு ஏமாற்றம் அவமானம் ஆக்ரோஷம் இறுதியில் எடுக்கும் நல்ல முடிவு இதுதான் தாலாட்டு மாறி போனதோ நாவலின் சுருக்கம் பெரும்பாலான பிள்ளைகள் சுயநலவாதியாகவே இருக்கிறார்கள் தாயின் பாசத்தை புரிந்து கொள்வதே இல்லை இந்த கதையில் வருகிற கதாபாத்திரங்கள் அதை பிரதிபலிக்கின்றன நம்மோடு வாழ்கிறவர்களின் கதை நாம் முன் நிகழ்கிற கதை இந்த கதையை படித்த பிறகாவது ஒரு சிலர் மனம் திருந்தினால் அதுவே இந்த கதைக்கு கிடைத்த வெற்றி இந்த நாவலைப்படித்தவர்கள் அனைவருமே இது விருதுக்குரிய படைப்பு என்றார்கள் விருது என்பது வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவதே ஆகும் அப்படி பார்த்தால் இந்த கதை கண்டிப்பாக விருதுக்குரிய கதைதான் இந்த கதையில் தீப்தி நரேன் காதலை மிகவும் நுணுக்கமாக கண்ணியமாக கௌரவமாக உருவாக்கி இருக்கிறேன் எந்த சூழ்நிலையிலும் கண்ணியம் தவறாத நரேன் போன்ற இளைஞர்களை கணவனாக அடைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் நரென் போன்ற ஒழுக்கமான பிள்ளையை மகனாக பெறுவதற்கு பெற்றோரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த கதையை படிப்பவர்கள் நரேன் மாதிரி ஒரு பிள்ளை தமக்கு பிறக்க வேண்டுமே என்று ஏங்குவார்கள்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 มีนาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย