4.3
สืบสวนสอบสวน
'தப்புத் தாப்பாய் ஒரு தப்பு' இந்தத் தலைப்பை படித்ததும் உங்களில் பலர்க்கு உதட்டில் புன்னகையும் மனசுக்குள் குழப்பமும் உற்பத்தியாகும். தப்பு என்பதே ஒரு தப்பான விஷயம். அதைத் தப்புத்தப்பாய் பண்ணினால் எப்படியிருக்கும்? தலைப்பில்தான் இந்தக் குழப்பம்..? கதையில் குழப்பம் சிறிதும் இல்லை. தப்பு செய்தவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், அல்லது சட்டத்தின் பார்வைக்கு கிடைத்தும் திறமையான வழக்கறிஞர்களை வைத்து சட்டத்தில் உள்ள ஓட்டைக்ளை உபயோகப்படுத்தி தப்பித்துக் கொண்டாலும் நீதி தேவதை ஏதாவது ஒரு வடிவில் வந்து அவர்க்ளை தண்டித்தே தீர்வாள் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாவலை ஒரு தொடர்கதையாக தினமணி நாளிதழில் எழுதினேன். கதையின் ஆரம்ப அத்தியாயத்தில் காயத்ரி என்ற இளம் பெண்ணும் சத்ய நாராயணன் என்ற இளைஞனும் எதிர்பாராத் விதமாய் தெருவில் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். காலம் இருவரையுமே உருமாற்றம் செய்து கொண்டாலும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து கொண்டு உரையாடுகிறார்கள்.
"இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க காயத்ரி?" காயத்ரி ஒரு புன்னகையோடு தன் கையில் வைத்து இருந்த பையைப் பிளந்து உள்ளே இருக்கு ஊதுவத்தி பாக்கெட்டுகளைக்க் காட்டி "இதுதான் என்னோட பிசினஸ். வீடு வீடாய் போய் விற்று நாலு காசு சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன்." என்று சொல்கிறாள். அதைக் கேட்டு அதிர்ந்துபோன சத்ய நாராயணன் "காயத்ரி! நான் இதை எதிர்பார்க்கலை. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தே! எதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சு நல்ல வேலைக்குப் போயிருக்கலாம்." என்று சொல்ல காயத்ரி ஒரு பெருமூச்சோடு அவனுக்கு இப்படி பதில் சொல்கிறாள். "விதி சிரிக்கும் போது நாம் அழ வேண்டியிருக்கே!"
இந்த வரியிலிருந்துதான் 'தப்புத்தப்பாய் ஒரு தப்பு' கதை மெல்ல சூடு பிடித்து ஆரம்பமாகிறது.
วันเปิดตัว
อีบุ๊ก: 6 เมษายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา