ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
แฟนตาซี&ไซไฟ
திரையில் வாழ்க்கையையும், பல விசித்திரங்களையும், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் தந்து ரசிகர்களை மகிழ்வித்த உலகத் திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இந்நூல், அவ்வாறு உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் முக்கிய திரைப்படங்களைப் பற்றியும், அந்த திரைப்படங்கள் மக்கள் மனதில் எதனால் நீங்காத இடம்பெற்று நிலைத்து நின்றது என்ற காரணங்களையும், வாசகர்களுக்கு எடுத்துச் சொல்வதோடு மட்டுமல்லாமல், அந்த திரைப்படங்கள் உருவாக்கிய சூழலை சாதனையாளர்களின் இளமைக்கால வாழ்க்கையையும் எடுத்துச் சொல்வது சிறப்பாகும்.
வித்தியாசமான சிந்தனைகளுடன் வென்ற திரைப்படங்களின் இன்னொரு பக்கத்தை வாசகர்களுக்கு வழங்கி, தமிழ்த் திரைத்துறைக்கு இந்நூல் அரிய தொண்டாற்றி இருக்கிறது.
வருங்கால தலைமுறையினருக்கு சினிமாவைப் பற்றிய பார்வையையும், நம்பிக்கையையும் ஊட்டுவதாகவும் இந்தப் படைப்பு இருக்கிறது.
"சென்றிடுவீர்...! எட்டுத்திக்கும்... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..." என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பெரும் முயற்சி எடுத்து, நீண்ட தேடலுடன் தகவல்களைத் திரட்டி, தமிழ்த்திரையுலகின் படைப்பாளுமை சிறக்க திரு.ராஜேஷ் ஆற்றியிருக்கும் பணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
திரையுலகில், எதிர்வரும் காலங்களில் பயணிக்கவுள்ள படைப்பாளிகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்நூல் விளங்கும்.
அன்புடன்
சேரன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย