ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரே வழி காந்தியம். “எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதே; தீமைக்குத் தீமை செய்யாதே; துன்பம் பொறு; பகைவரிடத்தும் அன்பாயிரு; தீச்செயல்களில் வெறுப்புக் காட்டு; அச்செயல் புரியும் மனிதரி டத்தில் வெறுப்புக் காட்டாதே; இயற்கையோடியைந்து வாழ்” - காலத்தை வென்று நிற்கும் அண்ணலின் சிந்தனைகள் இன்றைய உலகுக்கு அவசியம் என்பதை உலகம் உணர ஆரம்பித்து விட்டது; காந்தியத்தை உலகம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டது.
பல்வேறு கால கட்டங்களில், அன்பும், அமைதியும் உலகில் நிலைத்து நீடித்து நிற்க அண்ணல் கூறிய தத்துவங்களையும், சமுதாய வளர்ச்சிக்கு அவர் விடுத்த வேண்டுகோள்களையும் தனி மனித ஒழுக்குத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளையும் மக்களிடம் கொண்டு செலுத்துதல் வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசையை, எனது அறிவுக்கு எட்டிய சிந்தனைகளுடன் கலந்து இப்புத்தகத்தின் வாயிலாக நிறைவேற்றியுள்ளேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ตุลาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย