வான் மதிக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகள், ஒரு மகன், கணவன் இல்லை. மகள் அபிராமி நூறு சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைக்கப் பெற்றவள். ஆனால் அவளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு துரத்தப் பட்டவள். மகன் அஸ்வின் திருமணம் ஆகாதவன். நல்ல வேலை, கை நிறைய சம்பளம்.
அஸ்வின் பல வருடங்களாக ரோஜா என்ற பெண்ணை காதலித்து வந்தான். ரோஜாவும் அவனை காதலித்தாள். ரோஜாவின் தாய் வீட்டு வேலை செய்பவள். தந்தை டீ கடை வைத்திருப்பவன். ரோஜாவிற்கு வெண்ணிலா என்ற தங்கையும் உண்டு. வெண்ணிலா படித்து கொண்டிருந்தாள். ரோஜா அஸ்வின் வேலை செய்யும் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றினாள்.
வான் மதிக்கு தனக்கு வர போகும் மருமகளை பற்றிய எண்ணம் பெரியதாக இருந்தது. தனக்கு வர போகும் மருமகள் குறைந்தது ஐம்பது சவரன் நகைகள் போட்டுகொண்டு வர வேண்டும் என எதிர்பார்த்தாள். ஆனால் அஸ்வினுக்கு தனக்கு வரப்போகும் மனைவியை தன் வீட்டு ராணியாக மட்டுமே பார்க்க ஆசைப்பட்டான். அவனுக்கு நகைகள் மீது விருப்பம் இல்லை. இதனால் அம்மாவிற்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இனி தொடர் கதை காணலாம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา