Step into an infinite world of stories
1980களில் எஸ். வேதா என்ற பெயரிலும் அதற்குப் பின்பு வேதா கோபாலன் என்கிற பெயரிலும் சிறுகதைகளை எழுதிக் குவித்தவராக என் எழுத்தாள சகோதரிக்கு வாழ்த்துரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பை உண்மையிலேயே எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக நினைக்கிறேன். இதை நான் ஒரு சம்பிரதாயமாகக் கூறவில்லை.
ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் குமுதம், விகடன் போன்ற வார இதழ்களில் ஒரு சிறுகதை பிரசுரமானாலே, அது ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது. எத்தனையோ எழுத்தாளர்கள் அரும்பாடுபட்டு அனுப்பி வைத்த சிறுகதைகள் எல்லாம் சுவரில் அடிபட்ட பந்துகளாக திரும்பி வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வேதா கோபாலனின் கதைகள் மட்டும் குமுதத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எட்டிப் பார்க்கும்.
சில சமயங்களில் அது ஒருபக்கக் கதையாகவும், சில நேரங்களில் சற்றே பெரிய சிறுகதையாகவும் இருப்பதைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். பிறகு பல நாவல்கள் வரிசையாக வந்தன. பெரும்பாலும் குடும்பக் கதைகள் தான். ஒரு சிறிய சம்பவம், ஓர் அழகான, அன்பான குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை அற்புதமாக எடுத்துரைக்கும் வேதா கோபாலனின் ஒரு பக்கக் கதைகள் வாமன அவதாரமாகவும், சற்றே பெரிய சிறுகதைகள் விஸ்வரூபமாகவும் எனக்குக் காட்சியளித்தன. எல்லாக் கதைகளுமே எதார்த்தமாக ஆரம்பித்து கதையின் கடைசி வரிகள் படிப்பவர்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்த காரணத்தால்தான் அவருடைய கதைகள் அன்றைக்கு வந்து கொண்டிருந்த எல்லா வார இதழ்களிலும் பிரசுரமான மகத்தான வெற்றியைப் பெற்றன.
ஒவ்வொரு பக்கமும் இலக்கிய வாசனையோடு மணக்கும். வாழ்த்துக்களோடு...
ராஜேஷ்குமார்
Release date
Ebook: May 18, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International