Step into an infinite world of stories
4
Short stories
தன்னைச் சுற்றி பேசப்படும் பேச்சுக்கள், நிகழும் செயல்கள் ஆகியவற்றை வறட்டுத்தனமான ஒரு பத்திரிகை செய்தியாக ஆக்கி விடாமல் அவற்றிலிருந்து தானும், பிறரும் கற்றுக்கொள்ள வேண்டியதை எண்ணி ஒரு தமிழ் எழுத்தாளராக இவ்வுலகுக்கு தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.
அப்படி தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவரது மூலமாக எனக்கு சில வருத்தமான உண்மைகள் புலனாகிறது. அவை என்னவென்றால், இலக்கியம் வளம் மிகுந்த நாகரீகம் உள்ள தமிழினம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. கொடுமையினும் கொடுமையாக யார் யாரெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களே விழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை இச்சிறுகதை எடுத்துக் காட்டுகின்றன.
இக்கதாசிரியர் 1950 களின் நடுவில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி 2003 வரை 'ஹரஹர சங்கரா' என்ற குறுநாவலுடன் தனது இலக்கிய பயணத்தை முடித்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.
அவரது கதைகள் அனைத்தையும் படித்ததில்லை என்றாலும், ஒருசில கதைகள் மற்ற கதைகளுக்கு வழிகாட்டியாக அமைந்து குழப்புவதை களையும் வல்லமை உள்ளதாக கருகிறேன்.
உதாரணமாக, இன்றைய சமூகத்தில் வர்க்கப் போர் ஏற்படுத்தும் அதிர்வலைகளின் சதி வலையில் வருங்கால மானுடகுலம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அவர் எழுதிய 'ஆயுத பூஜை' அத்தாட்சியாகும். அந்த கதையில் குடும்பம், காமக்களிப்பு, தேங்காய் உடைப்பு இவற்றுக்கெல்லாம் விடை தரும் ஒரு புதிய மனிதனை உருவாக்கியிருந்தார்.
பொழுது போக்குப் பத்திரிகைகள் அத்தகைய புனித மனிதர்களின் புதிய படைப்புக்கு எக்காலத்திலும் இடம் தரா என்றும் சொல்லவும் வேண்டுமோ? அதைப்போலவே இவற்றில் இடம் பெற்றுள்ள பல கதைகளும் அத்தகைய வெகுஜனங்களின் விருந்து ஆகா!
- ஜெ.ஜெயஸிம்ஹன்
Release date
Ebook: February 5, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International