Step into an infinite world of stories
விருப்ப ஓய்வில் ஊருக்கு வந்திருக்கும் மிலிட்டரி அதிகாரியின் மகளான நாயகி, பணி நிமித்தம் தனது எம்.டியின் கோரிக்கைக்கு இணங்க, வெளிநாட்டிலிருந்து வரப் போகின்ற கே.ஆர். கன்ஷ்ட்ரக்ஷன் எம்.டியின் நிறுவனத்திற்கு, உதவி செய்யும் பொருட்டு வருகிறாள். அவளைப் பார்க்கும் நாயகன், அவளது உழைப்பு, திறமையின் மீதான நல்லெண்ணத்திலும், தன்னிடம் துடுக்குத்தனமாகவும், அலட்சியமாகவும் நடந்து கொள்கின்ற கோபத்திலும், அவள் மீதான பிடித்தத்திலும், தனது நிறுவனத்தில் பணிபுரிய வைக்க எண்ணுகிறான். அது தெரியாமல் அவள் வந்த வேலை முடிந்ததும், மறுபடியும் தனது பழைய அலுவலகத்திற்கே சென்று விடுகிறாள்.
அவள் வைத்து விட்டுச் சென்ற, இருபத்து ஐந்து லட்சம் பெருமான காசோலை காணாமல் போவதால், அவளையும் அழைத்து விசாரிக்கிறான். அவளது நிமிர்வுடன் கூடிய பதில், அவனை அறைந்து விட்ட கோபத்தில், தனக்கு கீழே கொண்டு வருகிறான். தன்மீது வீண் பழியை சுமத்தி விட்ட கோபத்தில் அவனை எதிரியாக நினைப்பவள், அவனுக்குப் பிடிக்காத அனைத்தையும் செய்வதுடன், அவனது நேசத்தையும் ஏற்க மறுத்து, தன்னை விரும்பும் நண்பனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள்.
நாயகியின் திருமணம் யாருடன் நடைபெறுகிறது? புதியதாக வந்திருக்கும் எம்.டிக்கும் அவளுக்கும் இடையிலுள்ள தொடர்பு, ஆஸ்ரமத்தில் வளர்ந்து வருகின்ற நாயகியின் குழந்தை, அவனது தங்கையின் புதிரான வாழ்க்கை, நாயகனின் அத்தை மகளின் வரவும், அவர்கள் வாழ்க்கையில் அவள் ஏற்படுத்திய அதிரடி மாற்றங்களும் ... இன்னும் பல சுவையான சம்பவங்களைத் தெரிந்து கொள்ள "கண்ணில் மிதக்கும் கனவா நீ??" நாவலை வாசித்துப் பாருங்கள்.
Release date
Ebook: March 7, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International