4
Agama & Spiritualitas
எதைத் தேடினேன்?
தான் தானாக உணரப்பெற்ற மகான்கள் முன்னுரையோ பின்னுரையோ இன்றி சிவத்தோடு மங்களமாகிவிட்ட பெருமைகளைப் பாரத புண்ணிய பூமி பெற்றிருந்தாலும் தேடுதல் மட்டும் தொடர்கிறது. உள்ளளவும் அந்தத் தேடுதல் நடைபெறும்.
மனித குலத்துக்கு ஒரு சக்தி தரப்பட்டுள்ளது. அதனால் இருட்டிலும் ஜீவிக்க முடியும். ஒளியிலும் வாழ இயலும். மனிதம் மேலானதையே நாடும். அதி உயர்வே அதன் இலக்கு. மனிதன் இருளிலிருந்து ஒளிக்குத் தாவுகிறான். ஞானத்தை அறிந்து வர விஞ்ஞானத்தை ஏவுகிறான். மனிதன் இருளில் வசிக்கும் இனமல்ல. வெளிச்சத்தை விழையும் உயிரினம். இருள் என்பது வடிவத்தில் இருட்டு, இயல்பில் அஞ்ஞானம்.
'ஞானி எனக்குப் பிரியமானவன்' என்று கீதாசாரியன் பகர்ந்தான். ஏனெனில் ஞானியானவன் தேடுகிறவன். எதைத் தேட வேண்டும் என்று அறிந்தவன். முயற்சி குன்றாதவன். தேடினால் தெரியும். அவரவரது பக்குவத்துக்கு ஏற்ப தேடியவை நிச்சயம் தெரியும்.
தேடு. தேடு. தேடு.
நீ ஒரு பத்திரிகையில் உதவி ஆசியனாக இருந்து கொண்டிருந்தால் உனக்குத் தேடுவதற்கு நேரம் இராது. அவ்வப்பொழுது கிடைத்த நேரத்தில் சிந்திப்பவனால் ஞானத்தை தேட முடியாது. முழு நேரத் தேடுபவனாக ஆகு. இன்றே இங்கே இப்பொழுதே. எங்கு போவது என்றெல்லாம் யோசிக்கிறவனால் எங்கேயும் போக முடியாது. வழி காட்டுகிறவனை ஞானி அறிவான். ஞானியை வழிகாட்டி அறிவான்.
குருவாயூர் க்ஷேத்திரத்தை அடைந்து துறவியாவதற்கு நான் செய்த முயற்சிகளை இங்கே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இங்ஙனம், ஜ.ரா. சுந்தரேசன்
Tanggal rilis
buku elektronik : 3 Januari 2020
4
Agama & Spiritualitas
எதைத் தேடினேன்?
தான் தானாக உணரப்பெற்ற மகான்கள் முன்னுரையோ பின்னுரையோ இன்றி சிவத்தோடு மங்களமாகிவிட்ட பெருமைகளைப் பாரத புண்ணிய பூமி பெற்றிருந்தாலும் தேடுதல் மட்டும் தொடர்கிறது. உள்ளளவும் அந்தத் தேடுதல் நடைபெறும்.
மனித குலத்துக்கு ஒரு சக்தி தரப்பட்டுள்ளது. அதனால் இருட்டிலும் ஜீவிக்க முடியும். ஒளியிலும் வாழ இயலும். மனிதம் மேலானதையே நாடும். அதி உயர்வே அதன் இலக்கு. மனிதன் இருளிலிருந்து ஒளிக்குத் தாவுகிறான். ஞானத்தை அறிந்து வர விஞ்ஞானத்தை ஏவுகிறான். மனிதன் இருளில் வசிக்கும் இனமல்ல. வெளிச்சத்தை விழையும் உயிரினம். இருள் என்பது வடிவத்தில் இருட்டு, இயல்பில் அஞ்ஞானம்.
'ஞானி எனக்குப் பிரியமானவன்' என்று கீதாசாரியன் பகர்ந்தான். ஏனெனில் ஞானியானவன் தேடுகிறவன். எதைத் தேட வேண்டும் என்று அறிந்தவன். முயற்சி குன்றாதவன். தேடினால் தெரியும். அவரவரது பக்குவத்துக்கு ஏற்ப தேடியவை நிச்சயம் தெரியும்.
தேடு. தேடு. தேடு.
நீ ஒரு பத்திரிகையில் உதவி ஆசியனாக இருந்து கொண்டிருந்தால் உனக்குத் தேடுவதற்கு நேரம் இராது. அவ்வப்பொழுது கிடைத்த நேரத்தில் சிந்திப்பவனால் ஞானத்தை தேட முடியாது. முழு நேரத் தேடுபவனாக ஆகு. இன்றே இங்கே இப்பொழுதே. எங்கு போவது என்றெல்லாம் யோசிக்கிறவனால் எங்கேயும் போக முடியாது. வழி காட்டுகிறவனை ஞானி அறிவான். ஞானியை வழிகாட்டி அறிவான்.
குருவாயூர் க்ஷேத்திரத்தை அடைந்து துறவியாவதற்கு நான் செய்த முயற்சிகளை இங்கே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இங்ஙனம், ஜ.ரா. சுந்தரேசன்
Tanggal rilis
buku elektronik : 3 Januari 2020
Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 1
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia