Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
கவிதை என்பது கருத்துவிதை. கவிதை என்பது பேசும் ஓவியம். கவிதை என்பது காலத்தின் கண்ணாடி. கவிதை என்பது கவிஞனின் நெஞ்சம்.
என் கண்கள் கண்ட காட்சிகள், என் செவிகள் கேட்ட செய்திகள், என் உள்ளம் உணர்ந்த உணர்வுகள் கவிதைகளாக உருப்பெற்று அகமுகம் என்ற தொகுப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
அகமுகம் என்ற இந்தக் கவிதைத்தொகுப்பு நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. தமிழ்முகம் என்ற பகுதியில் தமிழ்மொழியின் மேன்மை, இன்றைய நிலை, நாம் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குமுகமுகம் என்ற பகுதியில் சமுதாய அவலங்கள், வாழ்க்கை நிலை போன்ற கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பெண்மைமுகம் என்ற பகுதியில் பெண்களின் நிலை, அவர்களின் குமுறல்கள், பாலியல் வன்முறைகள் போன்ற கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இயற்கைமுகம் என்ற பகுதியில் இன்று இயற்கை எவ்வாறு சிதைக்கிறார்கள் என்பதையும், இயற்கையை எவ்வாறு காக்க வேண்டும் என்பதையும் விளக்கும் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
- பாவலர் கருமலைத்தமிழாழன்
Release date
Ebook: 18 December 2019
English
India