இந்த நூலில் நூறு விதமான நகைச்சுவை ததும்பும் படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்... இந்த நூறு படைப்புகளும் வெறும் கற்பனையிலிருந்து வடித்தெடுத்தவை என்று சொல்லிவிட முடியாது. அவர்தம் அனுபவங்களை இணைத்துச் சொல்லியிருக்கிறார்.
அவருடைய பாணியில் சொல்லியிருப்பதால் அத்தனையும் நகைச்சுவையாய்ப் பரிணமித்துள்ளன. இல்லையென்றால் அவர்பட்ட சிரமங்கள், துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், எல்லாமும் நகைச்சுவையாய் நமக்குக் கிடைத்திருக்குமா?
என்ன அழகான முரண்பாடுகள்!
தாம் பெற்ற துன்பங்களை நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு, அவற்றை எழுத்துக்களாகவும் வடிப்பதற்குத் தனியொரு திறன் வேண்டுமல்லவா?
அத்தகு தனித் திறனோடு பிறந்தவர் பாக்கியம் ராமசாமி அவர்கள் என்றால் அது மிகையல்ல.
அவரும் அவருடன் திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்களும் அமரர் திரு. புனிதன் அவர்களும் சேர்ந்திருந்த 'கூட்டு இருக்கிறதே... அதுவும் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்களின் மேற்காட்டுதலோடு அவர்கள் பணியாற்றிய காலம் இருக்கிறதே, அது ‘குமுத’த்திற்கான பொற்காலம்!
கிருஷ்ண தேவராயருக்கு ஒரு தெனாலிராமன் மாதிரி, அக்பருக்கு ஒரு பீர்பால் மாதிரி, எஸ்.ஏ.பி, அவர்களுக்கு திரு. பாக்கியம் ராமசாமி என்பேன் நான்!
சிரிக்கச் சிரிக்க எழுதும் இவரை பாக்கியம் ராமசாமி என்பதை விட 'பாக்கியம் சிரிப்புச்சாமி’ என்றே அழைக்கலாம்.
'கார் என்று பேர் படைத்தாய்' என்று தொடங்கும் முதல் கதை முதல், 'பலகாரத் திருவிழாவில் அப்புசாமி' என்கிற நூறாவது படைப்பு வரை பொங்கி வழிவது நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவையே!
சிரிக்கச் சிரிக்கச் சிரிக்க தோய்விட்டுப் போவது மட்டும் இல்லீங்க; நமது ஆயுளும் வளரும்...
வாசக நண்பர்களே! படிங்க, படிங்க; இந்த நூலைப் படிச்சுக்கிட்டே இருங்க; படிச்சதை நினைச்சுச் சிரிச்சுக்கிட்டே இருங்க! உங்க ஆயுளும் வளரும்... தீர்க்காயுசா இருங்க!
வணக்கம்.
அதிகமான அன்புடன்
- அமுதபாரதி
Release date
Ebook: 3 January 2020
இந்த நூலில் நூறு விதமான நகைச்சுவை ததும்பும் படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்... இந்த நூறு படைப்புகளும் வெறும் கற்பனையிலிருந்து வடித்தெடுத்தவை என்று சொல்லிவிட முடியாது. அவர்தம் அனுபவங்களை இணைத்துச் சொல்லியிருக்கிறார்.
அவருடைய பாணியில் சொல்லியிருப்பதால் அத்தனையும் நகைச்சுவையாய்ப் பரிணமித்துள்ளன. இல்லையென்றால் அவர்பட்ட சிரமங்கள், துன்பங்கள், துயரங்கள், அவலங்கள், எல்லாமும் நகைச்சுவையாய் நமக்குக் கிடைத்திருக்குமா?
என்ன அழகான முரண்பாடுகள்!
தாம் பெற்ற துன்பங்களை நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு, அவற்றை எழுத்துக்களாகவும் வடிப்பதற்குத் தனியொரு திறன் வேண்டுமல்லவா?
அத்தகு தனித் திறனோடு பிறந்தவர் பாக்கியம் ராமசாமி அவர்கள் என்றால் அது மிகையல்ல.
அவரும் அவருடன் திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்களும் அமரர் திரு. புனிதன் அவர்களும் சேர்ந்திருந்த 'கூட்டு இருக்கிறதே... அதுவும் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்களின் மேற்காட்டுதலோடு அவர்கள் பணியாற்றிய காலம் இருக்கிறதே, அது ‘குமுத’த்திற்கான பொற்காலம்!
கிருஷ்ண தேவராயருக்கு ஒரு தெனாலிராமன் மாதிரி, அக்பருக்கு ஒரு பீர்பால் மாதிரி, எஸ்.ஏ.பி, அவர்களுக்கு திரு. பாக்கியம் ராமசாமி என்பேன் நான்!
சிரிக்கச் சிரிக்க எழுதும் இவரை பாக்கியம் ராமசாமி என்பதை விட 'பாக்கியம் சிரிப்புச்சாமி’ என்றே அழைக்கலாம்.
'கார் என்று பேர் படைத்தாய்' என்று தொடங்கும் முதல் கதை முதல், 'பலகாரத் திருவிழாவில் அப்புசாமி' என்கிற நூறாவது படைப்பு வரை பொங்கி வழிவது நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவையே!
சிரிக்கச் சிரிக்கச் சிரிக்க தோய்விட்டுப் போவது மட்டும் இல்லீங்க; நமது ஆயுளும் வளரும்...
வாசக நண்பர்களே! படிங்க, படிங்க; இந்த நூலைப் படிச்சுக்கிட்டே இருங்க; படிச்சதை நினைச்சுச் சிரிச்சுக்கிட்டே இருங்க! உங்க ஆயுளும் வளரும்... தீர்க்காயுசா இருங்க!
வணக்கம்.
அதிகமான அன்புடன்
- அமுதபாரதி
Release date
Ebook: 3 January 2020
Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India