Personal Development
சுய முன்னேற்றச் சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. சுய முன்னேற்றச் சிந்தனை இல்லாமல் ஒரு மனிதன் முன்னேற்றத்தை வாழ்வில் காண முடியாது. எந்த ஒரு புகழ்மிக்க மனிதராகட்டும் அவர் மனதில் ஒரு காலத்தில் “சுய முன்னேற்றச் சிந்தனை” எனும் ஒரு விதை விழுந்த பிறகுதான் ‘உழைப்பு’ எனும் நீர் ஊற்றப்பட்டு ‘வாய்ப்புகள்’ எனும் உரம் ஏற்றப்பட்டு காலப்போக்கில் அவரால் வெற்றிக் கனியைப் பறிக்க முடிகிறது.
சுய முன்னேற்றக் கருத்துக்களை நிறைய எழுத வேண்டும் எனும் ஆவலை எனக்குள் தூண்டியவர்களுள் திரு. தமிழ்வாணன், அவர்தம் குமாரர் திரு. லேனா தமிழ்வாணன், திரு. எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் நூல்கள் ஒவ்வொன்றையும் “கருத்துக் கருவூலங்கள்” என்று சொல்லலாம்.
மேலும் இதில் வந்துள்ள கட்டுரைகள் பிரபல மாத இதழ்களான மங்கை, மங்கையர் மலர், வாசுகி ஆகியவற்றில் வெளிவந்தவை. ஒவ்வொரு கட்டுரையும் வெளியான பத்து நாட்களுக்குள் சென்னையிலிருந்தும் மற்றும் எங்காவது தொலை தூரத்தில் வசிக்கும் வாசகர்களிடமிருந்தும், “உங்கள் கட்டுரை எனக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி” என்றெல்லாம் எழுதிக் கடிதம் வரும். அவற்றைப் பார்த்த நான் உண்மையிலேயே பூரித்துப் போய் விடுவேன். சுய முன்னேற்றக் கருத்துக்கள் ஒவ்வொரு மனிதரிடமும் செலுத்தப்பட்டால் நிச்சயம் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். மலர்ச்சி ஏற்படும். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மாறுபாடும், மலர்ச்சியும் ஏற்பட்டால் பிறகு அங்கு சமுதாய மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் யாரைக் கேட்க வேண்டும்?
இந்நூலில் அடங்கியுள்ள சுயமுன்னேற்றக் கருத்துக்கள் நிச்சயமாக இதைப் படிக்கும் வாசகர்களின் ஆழ்மனதில் புகுந்து ஓர் இனிய மாறுபாட்டினை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒரு நல்ல மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 30 September 2020
Personal Development
சுய முன்னேற்றச் சிந்தனைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. சுய முன்னேற்றச் சிந்தனை இல்லாமல் ஒரு மனிதன் முன்னேற்றத்தை வாழ்வில் காண முடியாது. எந்த ஒரு புகழ்மிக்க மனிதராகட்டும் அவர் மனதில் ஒரு காலத்தில் “சுய முன்னேற்றச் சிந்தனை” எனும் ஒரு விதை விழுந்த பிறகுதான் ‘உழைப்பு’ எனும் நீர் ஊற்றப்பட்டு ‘வாய்ப்புகள்’ எனும் உரம் ஏற்றப்பட்டு காலப்போக்கில் அவரால் வெற்றிக் கனியைப் பறிக்க முடிகிறது.
சுய முன்னேற்றக் கருத்துக்களை நிறைய எழுத வேண்டும் எனும் ஆவலை எனக்குள் தூண்டியவர்களுள் திரு. தமிழ்வாணன், அவர்தம் குமாரர் திரு. லேனா தமிழ்வாணன், திரு. எம்.எஸ். உதயமூர்த்தி ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்கள் நூல்கள் ஒவ்வொன்றையும் “கருத்துக் கருவூலங்கள்” என்று சொல்லலாம்.
மேலும் இதில் வந்துள்ள கட்டுரைகள் பிரபல மாத இதழ்களான மங்கை, மங்கையர் மலர், வாசுகி ஆகியவற்றில் வெளிவந்தவை. ஒவ்வொரு கட்டுரையும் வெளியான பத்து நாட்களுக்குள் சென்னையிலிருந்தும் மற்றும் எங்காவது தொலை தூரத்தில் வசிக்கும் வாசகர்களிடமிருந்தும், “உங்கள் கட்டுரை எனக்குள் மனமாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி” என்றெல்லாம் எழுதிக் கடிதம் வரும். அவற்றைப் பார்த்த நான் உண்மையிலேயே பூரித்துப் போய் விடுவேன். சுய முன்னேற்றக் கருத்துக்கள் ஒவ்வொரு மனிதரிடமும் செலுத்தப்பட்டால் நிச்சயம் அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். மலர்ச்சி ஏற்படும். ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மாறுபாடும், மலர்ச்சியும் ஏற்பட்டால் பிறகு அங்கு சமுதாய மறுமலர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் யாரைக் கேட்க வேண்டும்?
இந்நூலில் அடங்கியுள்ள சுயமுன்னேற்றக் கருத்துக்கள் நிச்சயமாக இதைப் படிக்கும் வாசகர்களின் ஆழ்மனதில் புகுந்து ஓர் இனிய மாறுபாட்டினை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒரு நல்ல மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 30 September 2020
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India