இராஜராஜ சோழன் என்றதுமே, நம் மனக்கண்களின் முன், வானளாவ எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயில்தான் காட்சி தரும். காலத்தை யாரும் இழுத்துப் பிடித்து நிறுத்திவிட முடியாது. ஆனால், மாமனிதர்கள் தங்கள் மகத்தான செயல்களின் மூலம், காலத்தை அளக்கும் கருவி போல், அல்ல, அல்ல காலத்தையே வியந்து திரும்பிப் பார்க்க வைக்கும் அற்புதமாய் அபூர்வமான தடங்களை, அழுத்தமாகப் பதித்து விட்டுச் செல்கிறார்கள்.
தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் இராஜேந்திர சோழனோ எட்டியவரை பாய்ந்து, மத்திய இந்தியாவைத் தாண்டி, இமயத்தில் பெருகி வரும் கங்கை வரை தனது வாளை நீட்டினான். தந்தை விழிஞத்தில் கலமறுத்து, மேற்குக் கடல் வரை மேவி நின்றால், மகன் கிழக்குக் கடலைத் தன் மரக்கலப் படையால் கடைந்தும் குடைந்தும் வீரம் பதித்தான். சோழராட்சியை அழுத்தமாக நிலைப்படுத்தி, பின் வந்த சந்ததியர் பெருமை பேசி வாழ வெற்றிப் பதாகையை விண்முட்ட உயர்த்தி வைத்தவன் இவனே.
‘இவற்றையெல்லாம் நாங்கள் வரலாற்று நூல்களில் நிறையவே படித்திருக்கிறோமே’ என்கிறீர்களா? இந்த வரலாற்றுப் புதினத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும்தான். அதனால்தான் இவ்வளவும் எடுத்துச் சொல்ல நேர்கிறது.
இதில் நான் மிகவும் ரசித்த சம்பவங்கள், சாகசங்கள், வர்ணிப்புகள், தத்துவம் புதைந்த வார்த்தைகள் என ஒரு பட்டியலிட்டுத் தொகுத்தால், அவை ஓர் இலவச இணைப்பு வெளியிடத் தக்க அளவில் சிறு நூலாகவே அமைந்து விடும். எனவே, அவற்றை இங்கு எடுத்தெழுதவில்லை. ஊன்றி வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை உணர்ந்து மகிழ்வர். காலப் பெருவெளியில், கதையென்னும் கலத்திலேறி, மகத்தான சரித்திரச் சம்பவங்களை நிஜ தரிசனம் செய்ய நிச்சயம் இந்த ‘வந்தியதேவன் வாள்’ என்னும் வரலாற்றுப் புதினம் உங்களுக்கு உதவும் என உறுதி கூறுகிறேன்.
Release date
Audiobook: 19 October 2021
இராஜராஜ சோழன் என்றதுமே, நம் மனக்கண்களின் முன், வானளாவ எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயில்தான் காட்சி தரும். காலத்தை யாரும் இழுத்துப் பிடித்து நிறுத்திவிட முடியாது. ஆனால், மாமனிதர்கள் தங்கள் மகத்தான செயல்களின் மூலம், காலத்தை அளக்கும் கருவி போல், அல்ல, அல்ல காலத்தையே வியந்து திரும்பிப் பார்க்க வைக்கும் அற்புதமாய் அபூர்வமான தடங்களை, அழுத்தமாகப் பதித்து விட்டுச் செல்கிறார்கள்.
தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் இராஜேந்திர சோழனோ எட்டியவரை பாய்ந்து, மத்திய இந்தியாவைத் தாண்டி, இமயத்தில் பெருகி வரும் கங்கை வரை தனது வாளை நீட்டினான். தந்தை விழிஞத்தில் கலமறுத்து, மேற்குக் கடல் வரை மேவி நின்றால், மகன் கிழக்குக் கடலைத் தன் மரக்கலப் படையால் கடைந்தும் குடைந்தும் வீரம் பதித்தான். சோழராட்சியை அழுத்தமாக நிலைப்படுத்தி, பின் வந்த சந்ததியர் பெருமை பேசி வாழ வெற்றிப் பதாகையை விண்முட்ட உயர்த்தி வைத்தவன் இவனே.
‘இவற்றையெல்லாம் நாங்கள் வரலாற்று நூல்களில் நிறையவே படித்திருக்கிறோமே’ என்கிறீர்களா? இந்த வரலாற்றுப் புதினத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள் இராஜராஜ சோழனும், இராஜேந்திர சோழனும்தான். அதனால்தான் இவ்வளவும் எடுத்துச் சொல்ல நேர்கிறது.
இதில் நான் மிகவும் ரசித்த சம்பவங்கள், சாகசங்கள், வர்ணிப்புகள், தத்துவம் புதைந்த வார்த்தைகள் என ஒரு பட்டியலிட்டுத் தொகுத்தால், அவை ஓர் இலவச இணைப்பு வெளியிடத் தக்க அளவில் சிறு நூலாகவே அமைந்து விடும். எனவே, அவற்றை இங்கு எடுத்தெழுதவில்லை. ஊன்றி வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் இதை உணர்ந்து மகிழ்வர். காலப் பெருவெளியில், கதையென்னும் கலத்திலேறி, மகத்தான சரித்திரச் சம்பவங்களை நிஜ தரிசனம் செய்ய நிச்சயம் இந்த ‘வந்தியதேவன் வாள்’ என்னும் வரலாற்றுப் புதினம் உங்களுக்கு உதவும் என உறுதி கூறுகிறேன்.
Release date
Audiobook: 19 October 2021
Step into an infinite world of stories
Overall rating based on 83 ratings
Heartwarming
Boring
Informative
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 83
PRADEEP
2 Nov 2021
Please update nandhi purathu nayagi
ListeneR
31 Oct 2021
Nice story and excellent narration
Sudarshan
9 Feb 2022
Great story by Shri Vikraman and of course unbeatable Narration by Arunachalam sir.
Thangamani
11 Dec 2021
அருமையான கதை சிறந்த வாசிப்பு
Jaikumar
21 Apr 2022
நல்ல வரலாற்று புதினம் நிறைய தகவல்கள் - இப்படி நடந்திருக்கக்கூடும் என்று யூகத்தின் அடிப்படையில் 1970s & 1980s (ஆரம்பகால) கிட்ஸ் என இன்று அடைமொழியோடு அழைக்கப்படும் எங்களுக்கு எல்லாம் வந்தியத்தேவன் ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷனல் ஹீரோ! அவரது மணவாழ்கை குந்தவையுடன் எப்படி இருந்திருக்கும் என்று பொன்னியின் செல்வன் விட்டதை இங்கு தொடர முடிகிறது. சேஷாத்திரி அவர்களின் இராஜகேசரியிலும் இன்னும் சிலவற்றிலும் கிடைத்தாலும் இது சிறப்பானது.ஆனால், ஆசிரியர் தனது எழுத்து நடையிலும் காட்சி வரிசைப்படுத்தலிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாமோ என தோன்றுகிறது.இக்கால படங்களில் சிலவற்றில் வருவது போல முன்னுக்கு பின்னான தொடரி அமைப்பு காட்சிப்படுத்தலில் புரியலாம்! எழுத்திலும் ஒலி வடிவிலும் குழப்பத்தை தருகிறது.பேசியவர் நன்கு பேசினார் அவரது தொனி மாற்றங்கள் மற்றும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப குரல் மாற்றங்கள் வியக்கத்தக்கவைவாழ்துக்கள்!
Dr. Thilagavathy
16 Jun 2022
Super story and wonderfull narration
murugaraja
3 Nov 2021
வேறு எதுவும் வரலாற்று தொடர்கள் இல்லையா
K.Ganes
1 Nov 2021
எழுத்தாளர் அவர்களுக்கு சோழ நாட்டின் மீது என்ன பகையோ?
Marathon
2 Dec 2021
Super
தேவச்சந்திரன்
9 Feb 2022
இந்த ஆசிரியரின் பல புத்தகங்களை நான் படித்திருக்கிறேன் ஆனாலும் எனக்கு இவரின் பல வரலாற்று நாவல்கலை ஒளிப் புத்தகமாக நீங்கள் வாசித்து பதிவேற்ற வேண்டும் என விரும்புகிறேன். இந்த நிறுவனம் எங்களைப்போன்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பேருதவியாக உள்ளது. இதை தவிர்த்து ஆசிரியர் உதயணன் அவர்கள் பல்வேறு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார் அவரும் ஆசிரியர் சாண்டில்யன் அவர்களுக்கு நிகராக பல வரலாற்று படைப்புகளை கொடுத்துள்ளார் தமிழ்ச் சமூகத்திற்கு அந்த ஆசிரியரிடம் நீங்கள் எங்களுக்கு அறிமுகபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
English
India